 |
சிறப்பம்சம்: |  |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
|
12.அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
வாஞ்சிநாதேஸ்வரர் |
|
உற்சவர் | : |
- |
|
அம்மன்/தாயார் | : |
மங்களநாயகி, வாழவந்தநாயகி |
|
தல விருட்சம் | : |
சந்தன மரம். |
|
தீர்த்தம் | : |
குப்தகங்கை, எமதீர்த்தம். |
|
ஆகமம்/பூஜை | : |
காமிக ஆகமம் |
|
பழமை | : |
1000-2000 வருடங்களுக்கு முன் |
|
புராண பெயர் | : |
திருவாஞ்சியம் |
|
ஊர் | : |
ஸ்ரீ வாஞ்சியம் |
|
மாவட்டம் | : |
திருவாரூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
 | பாடியவர்கள்: |  |
|
|
|
|
அப்பர், சம்பந்தர், சுந்தரர்
வன்னி
கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் பொன்னி யன்றசடையிற் பொலிவித்த
புராணனார் தென்ன வென்றுவரி வண்டிசை செய்திருவாஞ்சியம் என்னை யாளுடை யானிட
மாகவுகந்ததே.
திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 70வது தலம். |
|
|
|
|
 |
திருவிழா: |
 |
|
|
|
|
இரண்டாம் நாளே தீர்த்தவாரி : எல்லாக் கோயில்களிலும்
பிரம்மோற்ஸவம் முடிந்த பிறகே தீர்த்தவாரி நடத்தப்படும். அன்று சுவாமியை
கோயில் சார்ந்த தீர்த்தத்தில் நீராட்டுவர்.
இத்தலத்தில், தீர்த்தத்துக்கு மிகவும் மகிமை வாய்ந்தது என்பதால், மாசிமகம்
பிரம்மோற்ஸவத்தின் இரண்டாம் நாளே தீர்த்தவாரியை நடத்தி விடுவர்.
இரண்டாம் நாளே இங்கு தீர்த்தவாரி.
அன்றைய தினம் வாஞ்சிநாதர் எமன் வாகனத்தில் உலாவருவார். கடைசி நாள்
முருகனுக்கு உற்சவம் நடைபெறும்.
கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் அதிகாலை வேளையிலும் தீர்த்தவாரி
நடப்பதுண்டு.
ஆடிப்பூரத்தை
ஒட்டியும் 10 நாள் திருவிழா உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக
ஆராதனை உண்டு. |
|
|
|
|
 |
தல சிறப்பு: |
 |
|
|
|
|
இங்கு சிவன் சுயம்பு
மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 110 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை ராஜ
கோபுரத்தை கி.பி.850ல் ராஜேந்திர சோழன் கட்டியுள்ளான்.
கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை.
ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில்
சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும். |
|
|
|
|
 |
திறக்கும் நேரம்: |  |
|
| | |
| காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | |
| | |
 |
முகவரி: |  |
| | |
|
அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில்,
ஸ்ரீ வாஞ்சியம் - 610 110
திருவாரூர் மாவட்டம். |
|
| | |
 |
போன்: |  |
| | |
|
+91-4366 291 305, 94424 03926, 93606 02973. | |
| | |
 |
பொது தகவல்: |  |
|
|
|
|
ராஜகோபுரம்
ஐந்து நிலைகளைக் கொண்டு கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்ததும்
இடப்பால் எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது. முன் மண்டபத்தில் நுழைந்தால்
விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளது. இங்குள்ள விநாயகர் அபயங்கர
விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.உள்வாயிலை தாண்டியதும் வலப்பால் அம்பாள்
சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். கவசமிட்ட கொடிமரம் - பலிபீடம் நந்தி
உள்ளன. அடுத்து, "நட்டுவன் பிள்ளையார் சந்நிதி' தலப்பதிகம் சலவைக்கல்லில்
பொறிக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளது. இடல்பால் அதிகார நந்தி உள்ளார்.
மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
மூலவர் - சிவலிங்கத் திருமேனி - சுயம்பு - சற்று தடித்த உயர்ந்த பாணம்.
உள் சுற்றில் வெண்ணெய்ப் பிள்ளையார், விநாயகர், சுப்பிரமணியர் பஞ்சபூத
லிங்கங்கள், ஜேஷ்டாதேவி, சனிபகவான் ஆகிய சன்னதிகள் உள்ளன. |
|
|
|
|
|
|
 |
பிரார்த்தனை |  |
|
| |
|
மகம்,
பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர், மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது
லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யலாம். பதவி
இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர
கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி குறை
நீங்கப்பெறலாம். | |
|
| |
 |
நேர்த்திக்கடன்: |  |
|
| |
|
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். | |
|
| |
 |
தலபெருமை: |  |
|
|
|
|
கிரகண
காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால்,
இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு
சிறப்பு
அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.
குப்த கங்கை :
ஒருமுறை கங்காதேவி சிவனிடம்,""மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது
பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள்
தான் வழி கூறவேண்டும்,''என வேண்டினாள். அதற்கு சிவன்,""உயிர்களை பறிக்கும்
எமனுக்கே பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம்
சேர்ந்த பாவங்கள் விலகும்,''என்றார்.
அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும் காசியில் விட்டு
விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ரகசியமாக
உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே குப்த கங்கை என்று இங்குள்ள தீர்த்தத்துக்கு
பெயர் வந்தது. எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக
கருதப்படுகிறது. தற்போது முனி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
மாசிமகத்தன்று இந்த தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை ஞாயிறு:
தட்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவன்,
தன்னை அவமதித்து நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்களை தண்டிக்க தன்
அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரனால் தண்டிக்கப்பட்டவர்களில்
சூரியனும் ஒருவர். இதனால் சூரியன் தன் ஒளி குறைந்து வருந்தி, ஸ்ரீவாஞ்சியம்
குப்த கங்கையில் கார்த்திகை மாதம் முழுவதும் நீராடி சிவனை நோக்கி கடும்
தவம் புரிந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன், சூரியனுக்கு இழந்த ஒளியை
மீண்டும் தந்தார். ஸ்ரீயை வாஞ்சித்து(ஸ்ரீ என்ற மகாலட்சுமியை அடைய
விரும்பி) திருமால் தவம் இருந்ததால் இத்தலம் "ஸ்ரீவாஞ்சியம்' ஆனது. இங்கு
சிவனே அனைத்துமாக அருள்பாலிப்பதால், நவக்கிரகங்களுக்கு சன்னதி இல்லை.
கோயிலின் அக்னி மூலையில் தெற்கு நோக்கி எமனும், சித்ரகுப்தனும் ஒரே
சன்னதியில் அருளுகின்றனர். எமனுக்கு வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர்.
எமதர்மனை சாந்திசெய்யும் விதத்தில், இங்கு ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி
செய்து நீண்ட ஆயுள் பெறலாம். இங்கு வீற்றிருக்கும் அஷ்டபுஜ
மகிஷாசுரமர்த்தினி மிகவும் சக்தி வாய்ந்தவள். |
|
|
|
|
|
 |
தல வரலாறு: |  |
|
|
|
|
"எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும்
போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும் பதவியை சிவபெருமான்
கொடுத்துள்ளார்' என எமதர்மராஜா மிகவும் வருந்தினார். திருவாரூர் சென்று
தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். ஸ்ரீவாஞ்சியம் சென்று
வழிபடும்படி அசரீரி கூறியது. அதன்படி எமன் இத்தலம் வந்து சிவனை நோக்கி
கடும் தவம் இருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் மாசிமாதம் பரணி
நட்சத்திரத்தில் காட்சி தந்து, ""வேண்டும் வரம் கேள்,''என்றார். அதற்கு
எமனும், ""இறைவா! அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவி எனக்கு
தந்துள்ளதால், எல்லாரும் என்னை கண்டு பயப்படுகின்றனர். திட்டித்
தீர்க்கின்றனர்.
பல கொலைகளால் தீராத பிரம்மஹத்தி தோஷம் பிடித்து என்னை வாட்டுகிறது.
பாவம் தொடர்கிறது. மன நிம்மதியே இல்லை,''என்றார். எமனின் கோரிக்கையை ஏற்ற
இறைவன், ""எமதர்மனே! இனிமேல் எமன் உயிரை பறித்து விட்டான் என
கூறமாட்டார்கள். நோய் வந்ததாலும், வயதாகி விட்டதாலும், விபத்து ஏற்பட்டும்
இறந்தான் என கூறுவார்கள். இதனால் பழியும், பாவமும் இனி உனக்கு கிடையாது.
மேலும், நீ தவம் செய்த இந்த தலத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம்
செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்க வேண்டும். இத்தலத்தில் தரிசனம்
செய்தவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அமைதியான
இறுதிக்காலத்தை தர வேண்டும்.
மேலும் நீ இத்தலத்தின் க்ஷேத்திர பாலகனாக விளங்குவாய். இத்தலத்திற்கு
வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்பே என்னைத்
தரிசிப்பார்கள்,''என அருளினார். அதன்படி, இங்கு எமதர்மராஜனுக்கே முதல்
வழிபாடு நடக்கிறது. |
|
|
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
|
13.அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
மதுவனேஸ்வரர் ( கல்யாண சுந்தரர், பிரகதீஸ்வரர், பிரகாச நாதர்) |
|
உற்சவர் | : |
- |
|
அம்மன்/தாயார் | : |
மதுவனேஸ்வரி |
|
தல விருட்சம் | : |
வில்வம் |
|
தீர்த்தம் | : |
பிரம்ம தீர்த்தம், சூல தீர்த்தம் |
|
ஆகமம்/பூஜை | : |
சிவாகமம் |
|
பழமை | : |
1000-2000 வருடங்களுக்கு முன் |
|
புராண பெயர் | : |
மதுவனம், திருநன்னிலத்துப் பெருங்கோயில் |
|
ஊர் | : |
நன்னிலம் |
|
மாவட்டம் | : |
திருவாரூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
 | பாடியவர்கள்: |  |
|
|
|
|
சுந்தரர்
தேவாரப்பதிகம்
தண்ணியல்
வெம்மையினான் தலையிற்கடை தோறும் பலி பண்ணியன் மேன் மொழியாரிடங் கெண்டுழல்
பண்டரங்கன் புண்ணிய நான்மறையோர் முறையாலடி போற்றிசைப்ப நண்ணிய நன்னிலத்துப்
பெருங்கோவில் நயந்தவனே.
-சுந்தரர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 71வது தலம். |
|
|
|
|
 |
திருவிழா: |
 |
|
|
|
|
திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், திருவாதிரை
இம்மூன்று திருவிழாவிற்கும் சுவாமி புறப்பாடு உண்டு.
ஆடி சுவாதியில் சுந்தரருக்கு குருபூஜை. பிரதோஷம், மாத சிவராத்திரி உள்பட
சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் ஸ்ரீ மதுவனேஸ்வரர் சுவாமி வார வழிபாட்டு
கழகம் சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. |
|
|
|
|
 |
தல சிறப்பு: |
 |
|
|
|
|
இத்தல இறைவன் சுயம்பு
லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
சூரியனின் அருகில் பைரவர் அருள்பாலிப்பதும், அனைத்து நவகிரகங்களும் சூரியனை
பார்த்திருப்பதும், சூரியனும் குருவும் நேருக்கு நேர் பார்த்திருப்பதும்,
சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலிப்பதும், சித்ர குப்தர் தனி
சன்னதியில் அருள்பாலிப்பதும் தலத்தின் சிறப்பம்சமாகும். |
|
|
|
|
 |
திறக்கும் நேரம்: |  |
|
| | |
| காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | |
| | |
 |
முகவரி: |  |
| | |
|
அருள்மிகு மதுவனேஸ்வரர் கோயில்,
நன்னிலம்- 610 105.
திருவாரூர் மாவட்டம். |
|
| | |
 |
போன்: |  |
| | |
|
+91- 94426 82346, +91- 99432 09771. | |
| | |
 |
பொது தகவல்: |  |
|
|
|
|
இந்திரன்
முதலான தேவர்கள், சூரியன், பிருஹத்ராஜன் ஆகியோர் இத்தல இறைவனை
வழிபட்டுள்ளனர். 270 அடி நீளமும், 135 அடி அகலமும் கொண்ட பரப்பில் கோயில்
அமைந்துள்ளது.
கோபுரம் 30 அடி உயரம், இரண்டு நிலை, 5 கலசங்களுடன்
கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் சிவன் கிழக்கு நோக்கியும்,
அம்மன் தெற்கு நோக்கியும் வீற்றிருக்கின்றனர். கோயில் உள்ளே அமைந்துள்ள
சிறிய மலையின் மீது உள்ள பிரகாரத்தில் நர்த்தன கணபதி, சோமாஸ்கந்தர்,
தெட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வங்கள்
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மலையின் கீழ் உள்ள பிரகாரத்தில்
சித்தி விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், அகஸ்தீஸ்வரர்,
பிரம்மபுரீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சூரியன், நவகிரகங்கள் ஆகியவற்றிற்கு
தனி சன்னதிகள் உள்ளன. மூலஸ்தானத்தின் அருகில் நடராஜருக்கு தனி சன்னதி
உள்ளது. |
|
|
|
|
|
|
 |
பிரார்த்தனை |  |
|
| |
|
இங்குள்ள
தீர்த்தத்தில் மாசி மாதம் நீராடி இறைவனை வழிபடுவோர் சகல நலன்களையும்
பெறுவர் என்றும், ஏகாதசி மற்றும் பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்பவர்கள்
மோட்சம் அடைவர் என்றும் கூறப்படுகிறது. | |
|
| |
 |
நேர்த்திக்கடன்: |  |
|
| |
|
சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். | |
|
| |
 |
தலபெருமை: |  |
|
|
|
|
கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் கட்டிய மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று.
தெற்கில் எமனும், மேற்கில் வருணனும், கிழக்கில் இந்திரனும், வடக்கில் குபேரனும் லிங்கம் அமைத்து பூஜை செய்துள்ளார்கள். |
|
|
|
|
|
 |
தல வரலாறு: |  |
|
|
|
|
முன்னொரு காலத்தில் தேவர்களின்
சபையில் ஆதி சேஷனுக்கும் வாயு பகவானுக்கும் போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் தன்
ஆயிரம் தலைகளால் மகாமேருவின் ஆயிரம் சிகரங்களையும் மறைத்து கொண்டான். எனவே
வாயுபகவானால் மகா மேருவை அசைக்க முடியவில்லை. இதனால் எல்லா உலகங்களும்
அதிர்வடைந்தது.
உலகமே அழிந்து விடும் என அஞ்சிய தேவர்கள்
ஆதிசேஷனிடம் வேண்டிக்கொள்ள, மகா மேருவின் ஒரே ஒரு சிகரத்தை மட்டும்
விட்டுக்கொடுத்தான். வாயுபகவான் அந்த சிகரத்தை பெயர்த்து தெற்கில் உள்ள
கடலில் போட எடுத்து செல்லும் போது அந்த சிகரத்தின் சிறிய துளி இந்த
தலத்தில் விழுந்ததாக தல புராணம் கூறுகிறது. சமவெளியாக இருந்த இப்பகுதியில்,
சிகரத்தின் துளி விழுந்த பகுதி சிறிய மலையாக மாறி அதன் மீது கோயில்
கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
கிருதா யுகத்தில் பிருஹத்ராஜன் என்ற
மன்னன் செய்த தவப்பயனாக சிவபெருமான் இத்தலத்தில் "தேஜோ லிங்கமாய்' காட்சி
தந்தார். துவாபர யுகத்தில் விருத்திராசூரன் என்ற அசுரன் தேவர்களை
துன்புறுத்தி வந்தான். அசுரனின் கொடுமைகளுக்கு பயந்த தேவர்கள் சிவனிடம்
தஞ்சம் புகுந்தனர்.
அசுரர்களை ஏமாற்ற இத்தல இறைவன் தேவர்களை
தேனீக்களாக மாற்றிவிட்டார். அத்துடன் இங்குள்ள கர்ப்பகிரகத்தில் தேனீக்களை
கூடுகட்டி வசிக்கச்செய்து லிங்க வழிபாடு செய்யும் படி கூறினார். தேவர்கள்
தேனீக்கள் வடிவம் கொண்டு வழிபட்டதால் இறைவன் "மதுவனேஸ்வரர்' என்றும் அம்மன்
"மதுவன நாயகி' என்றும் இத்தலம் "மதுவனம்' என்றும் அழைக்கப்பட்டது.
சுவாமியின்
கர்ப்பகிரகத்திலும், கோயிலின் சுற்றுப்புறங்களில் உள்ள மறைவிடங்களிலும்
யாருக்கும் தீங்கு செய்யாமல் தேனீக்கள் வசித்து வருகின்றன. |
|
|
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இத்தல
இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
சூரியனின் அருகில் பைரவர் அருள்பாலிப்பதும், அனைத்து நவகிரகங்களும் சூரியனை
பார்த்திருப்பதும், சூரியனும் குருவும் நேருக்கு நேர் பார்த்திருப்பதும்,
சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலிப்பதும், சித்ர குப்தர் தனி
சன்னதியில் அருள்பாலிப்பதும் தலத்தின் சிறப்பம்சமாகும்.
|
14.அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
பசுபதீஸ்வரர் |
|
உற்சவர் | : |
- |
|
அம்மன்/தாயார் | : |
சாந்த நாயகி |
|
தல விருட்சம் | : |
வில்வம் |
|
தீர்த்தம் | : |
க்ஷீரபுஷ்கரிணி |
|
ஆகமம்/பூஜை | : |
- |
|
பழமை | : |
1000-2000 வருடங்களுக்கு முன் |
|
புராண பெயர் | : |
திருக்கொண்டீச்சரம் |
|
ஊர் | : |
திருக்கொண்டீஸ்வரம் |
|
மாவட்டம் | : |
திருவாரூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
 | பாடியவர்கள்: |  |
|
|
|
|
திருநாவுக்கரசர்
தேவாரப்பதிகம்
பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதைமார்தம் மேலனாய்க் கழிந்த நாளும்
மெலிவொடு மூப்புவந்து கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்
சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டீச் சரத்துளானே.
-திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 72வது தலம். |
|
|
|
|
 |
திருவிழா: |
 |
|
|
|
|
கார்த்திகை மாதம் வியாழக்கிழமை எமகண்ட நேரத்தில் இறைவன் தீர்த்த வாரி வழங்குவார்.
இதில் பங்குகொள்பவர்களின் பாவம் நீங்கி சுக வாழ்வு அமையும் என்பது ஐதீகம். |
|
|
|
|
 |
தல சிறப்பு: |
 |
|
|
|
|
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இங்குள்ள லிங்கத்தில் பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் காணலாம். |
|
|
|
|
 |
திறக்கும் நேரம்: |  |
|
| | |
| காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | |
| | |
 |
முகவரி: |  |
| | |
|
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்
திருக்கண்டீஸ்வரம்.
(வழி) சன்னாநல்லூர்,
நன்னிலம் ஆர்எம்எஸ்,
திருவாரூர்-610 001.
திருவாரூர் மாவட்டம். |
|
| | |
 |
போன்: |  |
| | |
|
+91 - 4366 - 228 033. | |
| | |
 |
பொது தகவல்: |  |
|
|
|
|
பிராகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், மகாலட்சுமி,
சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், வைரவர், திருநாவுக்கரசர் சன்னதிகளும் உள்ளன. |
|
|
|
|
|
|
 |
பிரார்த்தனை |  |
|
| |
|
திருமணத்தில் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் உள்ள ஜேஷ்டா தேவியை வழிபாடு செய்கின்றனர்.
சுவாமி மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் மூன்று தலைகள், மூன்று கால்களுடன் ஜுரஹரேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு வெந்நீரில் அபிஷேகம்
செய்து, அன்னத்துடன் மிளகுரசம் வைத்து வழிபட்டால் பரிபூரண
குணமாகிவிடுகிறது. | |
|
| |
 |
நேர்த்திக்கடன்: |  |
|
| |
|
ஜேஷ்டா தேவிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். | |
|
| |
 |
தலபெருமை: |  |
|
|
|
|
காமதேனு
வழிபட்ட தலம். "கொண்டி' என்றால் "துஷ்ட மாடு' என்று பொருள். கொண்டி
வழிபட்டதால் இத்தலம் "கொண்டீஸ்வரம்' என அழைக்கப்படுகிறது.
அம்பாள்
சன்னதிக்கும், சுவாமி சன்னதிக்கும் இடையில் வெள்ளைக்கல்லால் செய்யப்பட்ட
மிகப்பழமையான "ஜேஷ்டாதேவி' அருள்பாலிக்கிறாள். ஜேஷ்டா என்றால் மூதேவி என்று
அர்த்தம். இத்தலத்தில் ஜேஷ்டாதேவி அனுக்கிரக தேவதையாக இருக்கிறாள்.
ஜேஷ்டாதேவி எனப்படும் தெய்வம் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில்
காணப்படுவாள். ஸ்ரீதேவியான (சீதேவி) லட்சுமியின் சகோதரியான இவள் மூதேவி
(மூத்ததேவி) என்றும் சொல்லப்படுவாள். இவளை யாரும் தரிசிப்பதில்லை. ஆனால்,
இவள் வழிபாட்டுக்கு உரியவள்.
சோம்பல் இல்லாத சுறுசுறுப்பான
வாழ்வைத் தர வேண்டும் என இவளிடம் பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு
அனுக்கிரகம் அருளும் மூர்த்தியாக இவள் அருள்பாலிக்கிறாள். |
|
|
|
|
|
 |
தல வரலாறு: |  |
|
|
|
|
சிவபெருமான், தன்னை பூமியில் உள்ள
மனிதர்கள் வழிபட்டு மேன்மை அடைய வேண்டும் என்பதற்காக வில்வாரண்யத்தில்
மறைந்திருந்தார். அன்னை பார்வதி பசுவடிவெடுத்து இத்தலத்தை தன் கொம்பால்
கீறிய போது அங்கு மறைந்து இருந்த இறைவனின் தலையில் கொம்பு பட்டு ரத்தம்
வடிந்தது.
அதைக்கண்ட பசு, லிங்க வடிவில் இருந்த இறைவனின் தலையில்
பால் சொரிந்து காயத்தை ஆற்றி வழிபட்டது. பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை
இன்றும் லிங்கத்தில் நாம் காணலாம். |
|
|
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இங்குள்ள லிங்கத்தில் பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் காணலாம்.
|
15.அருள்மிகு சவுந்தரேஸ்வர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
சவுந்தரேஸ்வரர் (அழகியநாதர், தாலவனேஸ்வரர்) |
|
உற்சவர் | : |
- |
|
அம்மன்/தாயார் | : |
பிரஹந்நாயகி, பெரியநாயகி |
|
தல விருட்சம் | : |
பனைமரம் |
|
தீர்த்தம் | : |
பராசர தீர்த்தம், அமிர்த தீர்த்தம் |
|
ஆகமம்/பூஜை | : |
- |
|
பழமை | : |
1000-2000 வருடங்களுக்கு முன் |
|
புராண பெயர் | : |
தாலவனம், பனையூர் |
|
ஊர் | : |
திருப்பனையூர் |
|
மாவட்டம் | : |
திருவாரூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
 | பாடியவர்கள்: |  |
|
|
|
|
சம்பந்தர், சுந்தரர்
தேவார பதிகம்
""அணியார் தொழவல்ல வரேத்த மணியார் மிட றென்று டையானூர் தணியார் மலர் கொண்டு இருபோதும் பணிவார் பயிலும் பனையூர்' -சம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 73வது தலம். |
|
|
|
|
 |
திருவிழா: |
 |
|
|
|
|
சிவராத்திரி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, திருவாதிரை. |
|
|
|
|
 |
தல சிறப்பு: |
 |
|
|
|
|
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். |
|
|
|
|
 |
திறக்கும் நேரம்: |  |
|
| | |
| காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | |
| | |
 |
முகவரி: |  |
| | |
|
அருள்மிகு சவுந்தரேஸ்வர் திருக்கோயில்
திருப்பனையூர் - 609 504, திருவாரூர் மாவட்டம். |
|
| | |
 |
போன்: |  |
| | |
|
+91-4366-237 007 | |
| | |
 |
பொது தகவல்: |  |
|
|
|
|
பிரகாரத்தில் முதலில் பராசர முனிவர் உருவம் உள்ளது. அடுத்து விநாயகர்
சன்னதி உள்ளது. கோஷ்ட மூர்த்தமாக, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரமன்,
துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். சண்டேசுவரர் சன்னதி உள்ளது.
இக்கோயில் கி.பி.11 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கருங்கல்
திருப்பணியாகக் கட்டப்பட்டது என்றும், கல்வெட்டில் இக்கோயில் ""இராசேந்திர
சோழப் பனையூர்'' என்று குறிக்கப் பெறுகின்றது சொல்லப்படுகிறது. |
|
|
|
|
|
|
 |
பிரார்த்தனை |  |
|
| |
|
பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைப்பதற்கு சிவனையும், திருமணத்தடை நீங்க துர்க்கையையும் வழிபடுகிறார்கள். | |
|
| |
 |
நேர்த்திக்கடன்: |  |
|
| |
|
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து வழிபடுகிறார்கள். | |
|
| |
 |
தலபெருமை: |  |
|
|
|
|
கோயில்
வாயில் முகப்பு கிழக்கு நோக்கியுள்ளது- ராஜகோபுரமில்லை. வாயில்மேல்
ரிஷபாரூடர் சிற்பம் சுதையால் ஆக்கப்பட்டுள்ளது. உள்நுழைந்ததும் வலதுபுறம்
பெரியநாயகி அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம் - தெற்கு நோக்கியது.
இத்தலத்தின் பதிகம் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. முன்னால் துணை இருந்த
விநாயகர் சந்நிதி உள்ளது. இப்பெயர்க்குச் சொல்லப்படும் காரணம் வருமாறு:-
தந்தையை இழந்து, பிறந்த கரிகாலனை, கொன்று அரசைக் கைப்பற்ற நினைத்த
தாயத்தார்களிடமிருந்து காப்பாற்ற முயன்ற தாய்மாமனாகிய
"இரும்பிடர்த்தலையார்' என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல்,
குழந்தையையும் தாயையும் பனையூருக்கு அனுப்பிவைத்தார். அரசி, தன் மகனுடன்
இவ்வூருக்கு வந்து, இக்கோயிலில் அடைக்கலம் புகுந்து, இவ்விநாயகரிடம்
முறையிட்டு, அவர் துணையால் எட்டு ஆண்டுகள் பாதுகாப்பாக இருந்தான். ஆகவே
கரிகாற் சோழனுக்குத் துணையிருந்ததனால் இவ்விநாயகர் "துணையிருந்த விநாயகர்
என்னும் பெயர் பெற்றார். அடுத்துத் தலமரங்களாகிய இரு பனைமரங்கள் உள்ளன.
இம்மரங்கள் நெடுங்காலமாக இருந்து வருகின்றன. வளர்ந்துள்ளவை
முதிர்ச்சியுறுங் காலத்தில், வித்திட்டு முளைக்காததாக, இரண்டின் அடியிலும்
முறையே பனங்கன்றுகள் தாமாகவே தோன்றி வளர்ந்து வருகின்றன.
இத்தல விநாயகர் சுந்தரர் வரலாற்றுத் தொடர்புடைய திருவாரூரில் உள்ள
மாற்றுரைத்த பிள்ளையார் நினைவாக இவ்விநாயகரும், "மாற்றுரைத்த விநாயகர்'
என்றழைக்கப்படுகின்றார். பராசர முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட
சிவலிங்கத் திருமேனி - தாலவனேஸ்வரர் - மேற்கு நோக்கியது - சதுர ஆவுடையார்
இப்பெருமானே தலத்திற்குரிய இறைவராவார். மூலவர் சந்நிதி மண்டபத்துள்
நால்வர் பிரதிஷ்டை - நடராஜர் சந்நிதி உள்ளன. துவாரபாலகர்கள் முகப்பில்
உள்ளனர். உள்ளே சிவலிங்கத் திருமேனி அழகுடன் சற்று உயரமாக அருட்பொலிவுடன்
விளங்குகின்றது. இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் திருமேனி புதுமையான
அமைப்புடையது- இடக்கையில் பழம் ஒன்றை ஏந்திய வண்ணமுள்ளது. |
|
|
|
|
|
 |
தல வரலாறு: |  |
|
|
|
|
சுந்தரர், திருவாரூர்ப் பங்குனி
உத்தரத் திருநாளுக்காகப் பரவையாரின் வேண்டுகோளின்படி, திருப்புகலூர்
இறைவனிடம் பொன் பெற்று ""தம்மையே புகழ்ந்து'' என்று பாடித் திருப்புகலூர்
வணங்கிய பின்பு, திருப்பனையூர் நினைத்து வந்தார். அப்போது ஊரின் புறத்தே
இறைவன் நடனக் காட்சி காட்டியருள, எதிர் சென்று தொழுது, வீழ்ந்து வணங்கி,
"அரங்காட வல்லார் அழகியர்' என்று பதிகம் பாடி, அருள் பெற்றார்.
இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும் ஊர்க்கு வடகிழக்கில் உள்ள மணிக்க
நாச்சியார் திட்டிற்கு அருகே உள்ள குளம் "சந்தித்த தீர்த்தம்' என்றும்
பெயருடன் திகழ்கிறது. |
|
|
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
|
16.அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
வீரட்டானேஸ்வரர் |
|
உற்சவர் | : |
- |
|
அம்மன்/தாயார் | : |
ஏலவார்குழலி, பரிமள நாயகி. |
|
தல விருட்சம் | : |
துளசி |
|
தீர்த்தம் | : |
சக்கர தீர்த்தம், சங்குதீர்த்தம் |
|
ஆகமம்/பூஜை | : |
- |
|
பழமை | : |
1000-2000 வருடங்களுக்கு முன் |
|
புராண பெயர் | : |
திருவிற்குடி |
|
ஊர் | : |
திருவிற்குடி |
|
மாவட்டம் | : |
திருவாரூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
 | பாடியவர்கள்: |  |
|
|
|
|
திருஞானசம்பந்தர்
தேவாரப்பதிகம்
கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி மார்பினர் வலங்கையில் எரியர் புன்சடை
யிடம்பெறக் காட்டகத் தாடிய வேடத்தர் விரியு மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி
விற்குடி வீரட்டம் பிரிவி லாதவர் பெருந்தவத்தோரெனப் பேணுவர் உலகத்தே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 74வது தலம். |
|
|
|
|
 |
திருவிழா: |
 |
|
|
|
|
சிவனுக்குரிய அனைத்து விழாக்களும் இங்கு கொண்டாடப்படுகிறது. |
|
|
|
|
 |
தல சிறப்பு: |
 |
|
|
|
|
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். |
|
|
|
|
 |
திறக்கும் நேரம்: |  |
|
| | |
| காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | |
| | |
 |
முகவரி: |  |
| | |
|
அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில்,
திருவிற்குடி - 609 405,திருவாரூர் மாவட்டம். |
|
| | |
 |
போன்: |  |
| | |
|
+91-94439 21146 | |
| | |
 |
பொது தகவல்: |  |
|
|
|
|
ராஜகோபுரம்
ஐந்து நிலைகளையுடையது, எதிரில் சக்கர தீர்த்தம் உள்ளது.
நல்லபடித்துறைகளும் சுற்றுச்சுவரும் கொண்ட பெரிய குளம், தீர்த்தக்கரையில்
விநாயகர் கோயில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும், எதிரில்
வலப்புறமாக உள்ள முதல் தூணில் நாகலிங்கச்சிற்பம் அழகாகவுள்ளது.
வெளிப்பிராகாரத்தில், பிருந்தையை, திருமாலுக்காக இறைவன் துளசியாக எழுப்பிய
இடமும், திருமால் வழிபட்ட சிவாலயமும் உள்ளன. உள்பிராகாரத்தில் வலமாக வரும்
போது மகாலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பள்ளியறை, பைரவர்,
சனிகவான், தனிக்கோயில் கொண்டுள்ள பைரவர், நவக்கிரகங்கள், சூரியன்,
சந்திரன், ஞானதீர்த்தம்மென்னும் கிணறு, பிடாரி முதலிய சன்னதிகள் உள்ளன. |
|
|
|
|
|
|
 |
பிரார்த்தனை |  |
|
| |
|
வீடு கட்டும் முன் ஏதும் பிரச்னை என்றால், இங்கிருந்து கல் எடுத்து சென்று, அந்த கல்லை வைத்து கட்டினால் தோஷ நிவர்த்தி கிடைக்கும். | |
|
| |
 |
நேர்த்திக்கடன்: |  |
|
| |
|
முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகி, அவர்கள் இறந்து போய் இருந்தால், இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும். | |
|
| |
 |
தலபெருமை: |  |
|
|
|
|
இங்கு
மூலவர் வீரட்டானேஸ்வரர். அம்மன் பரிமளநாயகி. பிருந்தை என்னும் சொல்லுக்கு
"துளசி' என்பது பொருள். கற்பிற்சிறந்த அப்பெண்மணியின் நினைவாக, துளசி தான்
இங்கு தல விருட்சம்.இது ஒரு வாஸ்து தோஷ நிவர்த்தி தலம். ஆஞ்சநேயர் வழிபாடு
இங்கு சிறப்பு. |
|
|
|
|
|
 |
தல வரலாறு: |  |
|
|
|
|
ஒரு முறை இந்திரன், தான் என்ற
அகந்தையுடன் சிவனை தரிசிக்க கைலாயத்திற்கு வந்தான். இதை அறிந்த சிவன்
சேவகன் வடிவெடுத்து கைலாய வாசலில் நின்று, உள்ளே செல்ல முடியாதபடி
தடுத்தார். கோபமடைந்த இந்திரன், தன் வஜ்ராயுதத்தால் சிவனை அடித்தான்.
கோபத்தால் சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்தார். காவல் காப்பவர், சிவன்
என்பதை அறிந்த இந்திரன், ஆணவத்தால் தான் செய்த செயலை மன்னிக்க வேண்டினான்.
கோபத்தில் தன் உடலில் ஏற்பட்ட வியர்வைத்துளியை பாற்கடலில் தெளித்தார்
சிவன். அதில் ஒரு அசுர குழந்தை தோன்றியது. இந்த குழந்தை பிரம்மனின் தாடியை
பிடித்து இழுக்க வலி தாங்காத பிரம்மனின் கண்களிலிருந்து கண்ணீர் தோன்றி
அந்த துளியும் குழந்தையின் மீது விழுந்தது. இப்படி சிவனின் வியர்வை துளி,
பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர் துளி ஆகிய ஜலத்தினால் உருவான
அசுரனாதலால் குழந்தைக்கு "ஜலந்தராசூரன்' என பெயர் வைக்கப்பட்டது.
அவன் பெரியவனானதும், மூவுலகும் தனக்கு அடிமையாக வேண்டும் என்றும்,
சாகாவரமும் கேட்டான். பிரம்மன் மறுத்தார். அதற்கு ஜலந்தராசூரன், ""தர்ம
பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு
அழிவு வரட்டும்,'' என வரம் வாங்கி விட்டான். இவனது அட்டகாசம் அதிகமானது.
கடைசியில் சிவனையே அழிக்க சென்றான்.
சிவன் அந்தணர் வேடமிட்டு, அசுரன் முன் வந்து நின்று, தன் காலால் தரையில்
சக்கர வடிவில் ஒரு வட்டம் போட்டார். ""இந்த சக்கரத்தை எடுத்து உன் தலையில்
வை. அது உன்னை அழிக்கும்,'' என்றார். ஆணவம் கொண்ட ஜலந்தரன், ""என்
மனைவியின் கற்பின் திறனால், எனக்கு அழிவு வராது,'' என சவால் விட்டான்.
இந்த நேரத்தில், திருமாலை அழைத்த சிவன், "" நீர் ஜலந்தராசூரனைப் போல்
வடிவெடுத்து, அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன் தான்
வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில்,
மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது.
இந்நேரத்தில், சக்கரத்தை அசுரன் எடுத்து தலையில் வைக்க அவன் கழுத்தை
சக்கரம் துண்டித்து விடுகிறது. இதை அறிந்த பிருந்தை, தன் கணவன் அழிய
காரணமாக இருந்த விஷ்ணுவிடம், ""நான் கணவனை இழந்து வருந்துவது போல, நீயும்
உன் மனைவியை இழந்து வருந்த வேண்டும்,'' என சாபம் கொடுத்து விட்டு
தீக்குளித்தாள். இதனால் தான், விஷ்ணு ராமாவதாரம் எடுக்க வேண்டி வந்தது.
பிருந்தையின் சாபத்தினால் விஷ்ணுவுக்கு பித்து பிடித்தது. பித்தை தெளிவிக்க
பிருந்தை தீகுளித்த இடத்தில் சிவன் ஒரு விதை போட்டார். இந்த விதை விழுந்த
இடத்தில் துளசி செடி வளர்ந்தது.
இந்த துளசியால் மாலைதொடுத்து
திருமாலுக்கு சாற்ற பித்து விலகுகிறது. அசுரனை அழிக்க காரணமாக இருந்த
சக்கரத்தை சிவனிடம் திருமால் கேட்டார். அதைப் பெறுவதற்காக ஆயிரம்
தாமரைகளால், சிவனை பூஜித்தார். சிவனின் திருவிளையாடலால் இரண்டு பூ
குறைந்தது. திருமால் தன் இருகண்களையும் எடுத்து, சிவனை பூஜிக்க மகிழ்ந்த
சிவன் சக்கரத்தை திருமாலுக்கு கொடுத்தார். |
|
|
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
|
17.அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
வர்த்தமானீஸ்வரர் |
|
உற்சவர் | : |
கல்யாண சுந்தரர் |
|
அம்மன்/தாயார் | : |
மனோன்மணி |
|
தல விருட்சம் | : |
பின்னை |
|
தீர்த்தம் | : |
அக்னி தீர்த்தம் |
|
ஆகமம்/பூஜை | : |
காமீகம் |
|
பழமை | : |
1000-2000 வருடங்களுக்கு முன் |
|
புராண பெயர் | : |
சரண்யபுரம் |
|
ஊர் | : |
திருப்புகலூர் |
|
மாவட்டம் | : |
திருவாரூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
 | பாடியவர்கள்: |  |
|
|
|
|
திருஞானசம்பந்தர்
தேவாரப்பதிகம்
பண்ண வண்ணத்த ராகிப் பாடலொடு ஆடல் அறாத விண்ண வண்ணத் தராய விரிபுகல்
ஊரரொர் பாகம் பெண்ண வண்ணத்த ராகும் பெற்றியொடு ஆணிணை பிணைந்த வண்ண
வண்ணத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 76வது தலம். |
|
|
|
|
 |
திருவிழா: |
 |
|
|
|
|
வைகாசியில் முருகநாயனார் குருபூஜை, சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம். |
|
|
|
|
 |
தல சிறப்பு: |
 |
|
|
|
|
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பபாலிக்கிறார்.
முருக நாயனார் அவதார தலம்.
திருநாவுக்கரசர் முக்தியடைந்த தலம். நவக்கிரகங்கள் "ட' வடிவில் இருப்பது விசேஷமான அமைப்பு. |
|
|
|
|
 |
திறக்கும் நேரம்: |  |
|
| | |
| காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும். | |
| | |
 |
முகவரி: |  |
| | |
|
அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில்
திருப்புகலூர் - 609 704.
திருவாரூர் மாவட்டம். |
|
| | |
 |
போன்: |  |
| | |
|
+91- 4366 - 292 300, +91- 94431 13025 | |
| | |
 |
பொது தகவல்: |  |
|
|
|
|
இத்தலவிநாயகர் வாதாபிகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். மூலவர்
சன்னதியின் மேல் உள்ள விமானம் இந்திர விமானம் எனப்படுகிறது. கோயிலைச்
சுற்றி மூன்று புறமும் தீர்த்தம் இருக்கிறது. இத்தலத்து லிங்கத்தை
பெயர்த்துச் செல்ல முயன்ற பாணாசுரனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் இது.
பிரகாரத்தில் நளன் வழிபட்ட சனீஸ்வரர் காட்சி தருகிறார். அருகில் நளன்
வணங்கியபடி இருக்கிறார். சரஸ்வதி, அன்னபூரணி இருவரும் அருகருகில்
இருக்கின்றனர். வாதாபி கணபதி அருகில் இரண்டு அசுரர்கள் வணங்கியபடி இருக்க,
தனிச்சன்னதியில் இருக்கிறார். |
|
|
|
|
|
|
 |
பிரார்த்தனை |  |
|
| |
|
வர்த்தமானீஸ்வரரிடம்
வேண்டிக்கொள்ளும் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறுவதாக நம்பிக்கை.
நிகழ்காலத்தில் செய்யும் செயல்கள் சிறப்பாக நிறைவேற, இவரிடம்
வேண்டிக்கொள்கிறார்கள். | |
|
| |
 |
நேர்த்திக்கடன்: |  |
|
| |
|
சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, மலர்களால் அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்தலாம். | |
|
| |
 |
தலபெருமை: |  |
|
|
|
|
வர்த்தமானீஸ்வரரிடம்
வேண்டிக்கொள்ளும் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறுவதாக நம்பிக்கை.
நிகழ்காலத்தில் செய்யும் செயல்கள் சிறப்பாக நிறைவேற, இவரிடம்
வேண்டிக்கொள்கிறார்கள். |
|
|
|
|
|
 |
தல வரலாறு: |  |
|
|
|
|
வருணன், வாயு, அக்னி மூவருக்கும்
ஒருசமயம் போட்டி உண்டானது. இதில் வருணனும், வாயுவும் சேர்ந்து அக்னியை,
சக்தியில்லாமல் போகும்படி செய்துவிட்டனர். அக்னி சக்தி இழந்ததால்,
தேவலோகம், பூலோகத்தில் மகரிஷிகளால் யாகம் நடத்த முடியவில்லை. எனவே அக்னி
தனக்கு மீண்டும் சக்தி வேண்டி சிவனை வேண்டினான். பூலோகத்தில் தன்னை வழிபட
மீண்டும் சக்தி கிடைக்கும் என்றார் சிவன்.
அதன்படி இங்கு வழிபட்ட
அக்னிக்கு சிவன், சக்தி தந்து 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3
பாதங்கள் கொண்ட உருவத்தையும் கொடுத்தருளினார். அவர் வழிபட்ட சிவன்
இத்தலத்தில் அக்னீஸ்வரராகவும், வர்த்தமானீஸ்வரராகவும் இங்கு
எழுந்தருளியுள்ளனர்.
நாயன்மார்களில் ஒருவரான முருகனார் இத்தலத்தில்
பிறந்தவர். சிவபக்தரான அவர் மலர்களை பறித்து, மாலையாக தொடுத்து தினமும்
வர்த்தமானீஸ்வரரை வழிபட்டு வந்தார். இங்கு வணங்க வரும் பக்தர்களுக்காக மடம்
ஒன்றையும் கட்டினார்.
திருஞானசம்பந்தரின் நண்பரான இவர், சீர்காழி
அருகிலுள்ள திருப்பெருமணநல்லூரில் (ஆச்சாள்புரம்) சம்பந்தர் திருமணத்தில்
கலந்து கொண்டார். சம்பந்தருடன் சேர்த்து ஜோதியில் ஐக்கியமாகி முக்தி
பெற்றார். சிவன் இவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார். |
|
|
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
|
18.அருள்மிகு ராமநாதர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
ராமநாதசுவாமி |
|
உற்சவர் | : |
நந்தியுடன் சோமாஸ்கந்தர் |
|
அம்மன்/தாயார் | : |
சரிவார்குழலி |
|
தல விருட்சம் | : |
மகிழம், செண்பகம் |
|
தீர்த்தம் | : |
ராம தீர்த்தம் |
|
ஆகமம்/பூஜை | : |
காமீகம் |
|
பழமை | : |
1000-2000 வருடங்களுக்கு முன் |
|
புராண பெயர் | : |
ராமநாதீச்சரம், இராமனதீச்சரம் |
|
ஊர் | : |
திருக்கண்ணபுரம் |
|
மாவட்டம் | : |
திருவாரூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
 | பாடியவர்கள்: |  |
|
|
|
|
திருஞானசம்பந்தர்
தேவாரப்பதிகம்
தழைமயி லேறவன் தாதையோதான் மழைபொழி சடையவன் மன்னுகாதில் குழையது இலங்கிய கோலமார்பின் இழையவன் இராமன தீச்சரமே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 77வது தலம். |
|
|
|
|
 |
திருவிழா: |
 |
|
|
|
|
மகாசிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்தசஷ்டி. |
|
|
|
|
 |
தல சிறப்பு: |
 |
|
|
|
|
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது லிங்கத்திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. |
|
|
|
|
 |
திறக்கும் நேரம்: |  |
|
| | |
| காலை
8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை
திறந்திருக்கும். இக்கோயிலுக்குச் செல்பவர்கள் முன்னரே போனில் தொடர்பு
கொண்டுவிட்டுச் செல்வது நல்லது. | |
| | |
 |
முகவரி: |  |
| | |
|
அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில்,
ராமநாதீச்சரம், திருக்கண்ணபுரம்- 609 704.
திருவாரூர் மாவட்டம். |
|
| | |
 |
போன்: |  |
| | |
|
+91-4366 - 292 300, 291 257, 94431 13025 | |
| | |
 |
பொது தகவல்: |  |
|
|
|
|
பிரகாரத்தில்
காசி பைரவருக்கு அருகில் வணங்கிய கோலத்தில் அகத்தியர் காட்சி தருகிறார்.
இந்த பைரவரை அகத்தியர்பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக சொல்கிறார்கள்.
இத்தலத்திலிருந்து சற்று தூரத்தில் திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள்
கோயில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று. ராமநாதசுவாமியை
தரிசிக்க செல்பவர்கள், சவுரிராஜரையும் வணங்கி திரும்பலாம். தல விநாயகரின்
திருநாமம் அனுக்ஞை விநாயகர். |
|
|
|
|
|
|
 |
பிரார்த்தனை |  |
|
| |
|
செய்த
தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்களும், ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்களும்
சிவனுக்கு ருத்ர ஹோமம் மற்றும் விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
அம்பாளிடம் வேண்டிக்கொள்ள சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை. | |
|
| |
 |
நேர்த்திக்கடன்: |  |
|
| |
|
சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தலாம். | |
|
| |
 |
தலபெருமை: |  |
|
|
|
|
சரிவார் குழலி:
முற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவருக்கு புத்திரப்பேறு
இல்லை. சிவபக்தரான அவர் குழந்தை வேண்டி சிவனுக்கு யாகம் நடத்தினார். சிவன்,
அசரீரியாக அம்பிகையே அவருக்கு மகளாக பிறப்பாள் என்று அருளினார். ஒருசமயம்
மன்னர் வனத்திற்கு வேட்டையாடச் சென்ற போது ஓரிடத்தில் 4 பெண் குழந்தைகளை
கண்டார். குழந்தைகளை எடுத்து வளர்த்தார். அவர்கள் பிறப்பிலேயே சிவபக்தைகளாக
திகழ்ந்தனர். தகுந்த பருவத்தில் அவர்களை மணந்து கொள்ளும்படி சிவனிடம்
வேண்டினார். சிவனும் மணந்து கொண்டார்.
இந்த அம்பிகையர் நால்வரும் இப்பகுதியிலுள்ள நான்கு தலங்களில் காட்சி
தருகின்றனர். இத்தலத்தில் அம்பிகை சரிவார் குழலியாகவும்,
திருச்செங்காட்டங்குடியில் வாய்த்த திருகுகுழல் நாயகி, திருப்புகலூரில்
கருந்தாழ் குழலியம்மை, திருமருகல் தலத்தில் வண்டார் குழலியம்மையாகவும்
காட்சி தருகிறாள்.
கரு காத்த அம்பிகை: நான்கு அம்பிகையருக்கும், "சூலிகாம்பாள்'
என்ற பொதுப்பெயர் உள்ளது. ஒருசமயம் இப்பகுதியில் வசித்த அம்பாள் பக்தையான
ஏழைப்பெண் ஒருத்தி கர்ப்பமடைந்தாள். ஒருநாள் இரவில் அவளது தாயார்,
ஆற்றைக்கடந்து வெளியில் சென்றுவிட்டாள். அன்றிரவில் பலத்த மழை பெய்யவே,
அவளால் கரையைக் கடந்து வீடு திரும்ப முடியவில்லை. அப்போது அம்பிகையே அவளது
தாயார் வடிவில் சென்று பிரசவம் பார்த்தாள். எனவே இந்த நான்கு தலங்களிலுள்ள
அம்பிகைக்கும் "சூலிகாம்பாள்' என்ற பெயர் ஏற்பட்டது. "சூல்' என்றால் "கரு'
என்று பொருள். "கரு காத்த அம்பிகை' என்றும் இவளுக்கு பெயர் உண்டு.
பிரசவம் பார்த்துவிட்டு இரவில் தாமதமாக சென்றதால், அம்பிகை கோயிலுக்குள்
செல்லாமல் வெளியிலேயே நின்றுவிட்டாள். எனவே இந்த நான்கு தலங்களிலும்
அம்பாள் சன்னதி வெளியில் தனியே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அர்த்தஜாம
பூஜையில் மட்டும் அம்பிகைக்கு சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய்
கலந்த சாத நைவேத்யம் படைப்பது விசேஷம்.
புனர்பூச பூஜை: இங்குள்ள சோமாஸ்கந்தர் (உற்சவ மூர்த்தி) மிக
விசேஷமானவர். இச்சிலை ராமர், சிவனை வழிபடுவதற்காக அம்பிகை நந்தியை இழுத்த
அமைப்பில் வடிக்கப்பட்டிருக்கிறது. ராமர் கோயில்களில் அவரது
திருநட்சத்திரமான புனர்பூசத்தன்று விசேஷ பூஜை நடக்கும். ராமர் வழிபட்ட
தலமென்பதால் இங்கு சிவனுக்கு அந்நாளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது.
தற்போதும் சாயரட்சை பூஜையை ராமரே செய்வதாக ஐதீகம். இவ்வேளையில் சுவாமி
தரிசனம் செய்வது விசேஷம்.
சுப்பிரமணியர் தனிச்சன்னதியில் இருக்கிறார்.
திருச்செந்தூரில் முருகப்பெருமான், வலது கையில் மலர் வைத்தபடி காட்சி
தருகிறார். இத்தலத்தில் இவர் இடதுகையில் மலர் வைத்து, வலது கையால்
ஆசிர்வதித்த கோலத்தில் காட்சி தருகிறார். உடன் வள்ளி, தெய்வானை
இருக்கின்றனர்.
ராமர் வழிபட்ட தலம் என்பதால், "ராமநாதீச்சரம்' என்று அழைக்கப்படுகிறது.
ராமரை நந்தி மறைத்ததால், "ராமநந்தீச்சரம்' என்ற பெயரும் உண்டு. சுவாமிக்கு
தீபாராதனை செய்யும்போது லிங்கத்திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம். |
|
|
|
|
|
 |
தல வரலாறு: |  |
|
|
|
|
ராமர், சீதையை மீட்க இலங்கை
சென்றபோது, போரில் ராவணன் உட்பட பல வீரர்களை வீழ்த்தினார். இந்த தோஷம்
நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த அவர், அயோத்தி திரும்பும் வழியில் பல
தலங்களில் சிவவழிபாடு செய்தார். அவர் செண்பக வனமான இவ்வழியே திரும்பினார்.
ஒரு மரத்தின் அடியில் சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருந்ததைக்
கண்டார். சிவனுக்கு பூஜை செய்ய ஆயத்தமானார். நந்தி தேவர், ராமரை மானிடர் என
நினைத்து சிவனை நெருங்கவிடாமல் தடுத்தார். அப்போது அம்பிகை தோன்றி,
நந்தியை தன் பக்கமாக இழுத்துக்கொண்டு, ராமர் சிவபூஜை செய்ய உதவினாள். ராமர்
சிவவழிபாடு செய்து பின்பு அயோத்தி திரும்பினார். பிற்காலத்தில் இங்கு
கோயில் எழுப்பப்பட்டது. ராமரால் வழிபடப்பட்டவர் என்பதால் சுவாமி,
"ராமநாதேஸ்வரர்' என்று பெயர் பெற்றார். |
|
|
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
|
19.அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
கணபதீஸ்வரர் |
|
உற்சவர் | : |
உத்திராபசுபதீஸ்வரர் |
|
அம்மன்/தாயார் | : |
வாய்த்த திருகுகுழல் உமைநாயகி ( சூளிகாம்பாள்) |
|
தல விருட்சம் | : |
காட்டாத்தி |
|
தீர்த்தம் | : |
சூர்ய, சந்திர புஷ்கரிணி |
|
ஆகமம்/பூஜை | : |
காமீகம் |
|
பழமை | : |
1000-2000 வருடங்களுக்கு முன் |
|
புராண பெயர் | : |
கணபதீச்சரம் |
|
ஊர் | : |
திருச்செங்காட்டங்குடி |
|
மாவட்டம் | : |
திருவாரூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
 | பாடியவர்கள்: |  |
|
|
|
|
சம்பந்தர், அப்பர், அருணகிரியார்
தேவாரப்பதிகம்
தோடுடையான்
குழையுடையான் அரக்கன்தன் தோளடர்த்த பீடுடையான் போர்விடையான் பெண்பாகம்
மிகப்பெரியான் சேடுடையான் செங்காட்டங் குடியுடையான் சேர்ந்தாடும்
காடுடையான் நாடுடையான் கணபதீச் சரத்தானே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 79வது தலம். |
|
|
|
|
 |
திருவிழா: |
 |
|
|
|
|
சித்திரை பரணியில் பிள்ளைக்கறி சமைத்த விழா,
மார்கழி சதயசஷ்டியில் கணபதி விழா, சிவராத்திரி, திருக்கார்த்திகை,
ஐப்பசியில் அன்னாபிஷேகம். |
|
|
|
|
 |
தல சிறப்பு: |
 |
|
|
|
|
இத்தல மூலவர் சுயம்பு முர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தனி சன்னதியில் அருள்பாலிக்கும் உத்திராபசுபதீஸ்வரர் தற்போதும் நெற்றியில் காயத்துடனே காட்சி தருகிறார். |
|
|
|
|
 |
திறக்கும் நேரம்: |  |
|
| | |
| காலை 6.45 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | |
| | |
 |
முகவரி: |  |
| | |
|
அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் (கணபதீஸ்வரர்) திருக்கோயில், கணபதீச்சரம்,
திருச்செங்காட்டங்குடி,
திருப்புகலூர் - 609 704.
திருவாரூர் மாவட்டம். |
|
| | |
 |
போன்: |  |
| | |
|
+91- 4366 - 270 278, 292 300, +91-94431 13025. | |
| | |
 |
பொது தகவல்: |  |
|
|
|
|
பிரகாரத்தில் புஜங்கலலிதமூர்த்தி, கஜசம்ஹாரமூர்த்தி, ஊர்த்துவதாண்டவர்,
காலசம்ஹாரமூர்த்தி, கங்காளமூர்த்தி, பிட்சாடனார், திரிபுரசம்ஹார மூர்த்தி,
பைரவர் என வரிசையாக எட்டு சம்ஹாரமூர்த்திகள் காட்சி தருவது விசேஷம்.
இவ்வாறு
அட்ட வீரட்ட தலங்களிலுள்ள சுவாமிகளையும் இங்கு தரிசிக்கலாம்.
தனிச்சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், அசுர மயில் மீது
அமர்ந்து காட்சி தருகிறார். அருணகிரியாரால் திருப்புகழ் பாடப்பெற்றவர்
இவர்.
சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள துர்க்கை எட்டு கைகளில் ஆயுதம்
ஏந்தி காட்சி தருகிறாள். இவள் ஒரு கையில் வில்லுடன் காட்சி தருவது சிறப்பு.
சிறுதொண்டரை கைலாயத்திற்கு அழைத்துச் சென்ற சிற்பம், உள்ளது.
பிரகாரத்தில்
அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, நால்வர், சங்கநிதி, பதுமநிதியுடன் நாகர்,
இரட்டை பைரவர் இருக்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில் சூரியன் மட்டும்
உயர்ந்த பீடத்தில் காட்சி தருகிறார். |
|
|
|
|
|
|
 |
பிரார்த்தனை |  |
|
| |
|
செய்த தவறுக்கு பிராயச்சித்தம் வேண்டுபவர்கள் இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
தோஷம், மனக்குழப்பங்கள் நீங்கவும் இங்கு வணங்கலாம். கர்ப்பிணிகள் அம்பிகையிடம் வேண்டிக்கொள்ள சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை. | |
|
| |
 |
நேர்த்திக்கடன்: |  |
|
| |
|
சுவாமி, உத்திராபசுபதீஸ்வரர், அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். | |
|
| |
 |
தலபெருமை: |  |
|
|
|
|
உத்திராபசுபதீஸ்வரர்:
மூலவர் கணபதீஸ்வரருக்கு வலப்புறத்தில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில்
உத்திராபசுபதீஸ்வரர் இருக்கிறார். இவரே இத்தலத்தின் பிரசித்தி பெற்ற
மூர்த்தியாவார். இவரது பெயரிலேயே தலமும் அழைக்கப்படுகிறது. கைகளில்
உடுக்கை, திருவோடு, திரிசூலத்துடன் இவர் காட்சி தருகிறார்.
முற்காலத்தில்
இப்பகுதியில் வசித்த பரஞ்சோதி என்பவர், பல்லவ மன்னரின் போர்ப்படை தளபதியாக
இருந்தார். சிவபக்தரான இவர், சிவனருளால் பல போர்களிலும் வெற்றி வாகை
சூடினார். பரஞ்சோதியாரின் பக்தியையும், சிவத்தொண்டையும் அறிந்த மன்னன்,
அவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அது சிவனுக்கே நேர்ந்ததாகும் என
கருதி, அவரை சிவத்தொண்டு செய்யும்படி வேண்டிக்கொண்டான். அவரும்
ஏற்றுக்கொண்டார்.
மங்கை நல்லாள் என்பவரை மணந்து, சீராளன் என்னும் மகனைப்
பெற்றார். தினமும் சிவத்தொண்டர்களுக்கு உணவு படைத்தபின்பே, தான் உண்பதை
வழக்கமாக கொண்டிருந்த இத்தம்பதியினர், அடியார்கள் கேட்டதை இல்லை என்று
சொல்லாமல் படைத்து வந்தனர்.
ஒருசமயம் சிறுத்தொண்டர் வீட்டிற்கு
அடியார் யாரும் வரவில்லை. எனவே அடியாரைத்தேடி அவர் வெளியில் சென்றார்.
அப்போது சிவன், அடியார் வேடத்தில் அவரது இல்லத்திற்கு சென்றார்.
சிறுதொண்டரின் மனைவி திருவெண்காட்டுநங்கை, பணியாள் சீராளநங்கை அவரை
வரவேற்று, சாப்பிட அழைத்தனர். கணவன் இல்லாத வீட்டில் சாப்பிட மறுத்த அவர்,
இக்கோயில் காட்டாத்தி மரத்தினடியில் இருப்பதாக சொல்லிவிட்டு இங்கு வந்தார்.
வீடு திரும்பிய சிறுத்தொண்டரிடம் மனைவி நடந்ததைக் கூறினார். மகிழ்ந்த
சிறுதொண்டர் கோயிலுக்கு வந்து அடியாரை அழைத்தார். அவர் சிறுதொண்டரின் மகனை
சமைத்து படைத்தால் மட்டுமே, உணவருந்த வருவதாக கூறினார். அவரும்
ஏற்றுக்கொண்டு மகனை அறுத்து, சமைத்தார். சாப்பிடும் முன்பு அடியார்,
சிறுதொண்டரின் மகனையும் சாப்பிட அழைக்கும்படி கூறினார்.
திகைத்த
சிறுத்தொண்டரும், மனைவியும் வெளியில் நின்று மகனை அழைக்க, அவன் ஓடி
வந்தான். மகிழ்ந்த தம்பதியர் வீட்டிற்குள் சென்றபோது, அடியவர் வடிவில் வந்த
சிவன், அம்பிகையுடன் காட்சி தந்து, நால்வருக்கும் முக்தி கொடுத்து
அருள்புரிந்தார். இவரே இங்கு உத்திராபசுபதீஸ்வரராக காட்சி தருகிறார். இவரது
சன்னதி எதிரில் காட்டாத்தி மரமும், சிறுத்தொண்டர் குடும்பத்தினருடன்
காட்சி தருகின்றனர்.
நான்கு அம்பாள்: முற்காலத்தில்
இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவருக்கு குழந்தை இல்லை. சிவபக்தரான அவர்
புத்திரப்பேறுக்காக சிவனை வேண்டி யாகம் நடத்தினார். சிவன் அசரீரியாக
அம்பிகையே அவருக்கு மகளாக பிறப்பாள் என்றார். ஒருசமயம் வேட்டையாடச்
சென்றபோது மன்னர் 4 பெண் குழந்தைகளை கண்டார். அக்குழந்தைகளை வளர்த்தார்.
அவர்கள் பிறப்பிலேயே சிவபக்தைகளாக திகழ்ந்தனர். தகுந்த பருவத்தில் அவர்களை
மணந்து கொள்ளும்படி சிவனிடம் வேண்டினார். சிவனும் மணந்து கொண்டார். இந்த
அம்பிகையர் நால்வரும் இப்பகுதியிலுள்ள நான்கு தலங்களில் காட்சி
தருகின்றனர். இத்தலத்தில் அம்பிகை வாய்த்த திருகுகுழல் நாயகியாகவும்,
திருப்புகலூரில் கருந்தாழ்குழலியம்மை, கணபதீச்சரத்தில் சரிவார்குழலியம்மை,
திருமருகல் தலத்தில் வண்டார்குழலியம்மையாகவும் காட்சி தருகிறாள்.
தனிக்கோயில் அம்பிகை: அம்பிகையர்
நால்வருக்கும், "சூலிகாம்பாள்' என்ற பொதுப்பெயர் உள்ளது. ஒருசமயம்
இப்பகுதியில் வசித்த அம்பாள் பக்தையான ஏழைப்பெண் ஒருத்தி கர்ப்பமுற்றாள்.
ஒருநாள் இரவில் அவளது தாயார், ஆற்றைக் கடந்து வெளியில் சென்றுவிட்டாள்.
அன்றிரவில் பலத்த மழை பெய்யவே, அவளால் கரையைக் கடந்து வீடு
திரும்பமுடியவில்லை. அப்போது அம்பிகையே அவளது தாயார் வடிவில் சென்று
பிரசவம் பார்த்தாள். எனவே இந்த நான்கு தலங்களிலுள்ள அம்பிகைக்கும்
"சூலிகாம்பாள்' என்ற பெயரும் உண்டு. "சூல்' என்றால் "கரு'வைக் குறிக்கும்.
பிரசவம்
பார்த்துவிட்டு இரவில் தாமதமாக சென்றதால், அம்பிகை கோயிலுக்குள் செல்லாமல்
வெளியில் நின்றுவிட்டாள். எனவே இந்த நான்கு தலங்களிலும் அம்பாள் சன்னதி
வெளியில் தனியே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவளுக்கு அர்த்தஜாம
பூஜையின்போது மட்டும் சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாத
நைவேத்யம் படைப்பது விசேஷம்.
வாதாபி கணபதி: ஒருசமயம்
பரஞ்ஜோதி, போருக்குச் சென்றபோது அங்கிருந்த விநாயகரை வணங்கி போர்
புரிந்தார், வெற்றி பெற்றார். வெற்றியின் அடையாளமாக விநாயகரை தமிழகத்திற்கு
கொண்டு வந்தார். கஜமுகாசுரனை அழித்ததற்காக விநாயகர் தோஷ நிவர்த்தி பெற்ற
இத்தலத்தில், பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகே தமிழகத்தில் விநாயகருக்கு உருவ
வழிபாடு உண்டானதாக சொல்வர். எனவே இவரை "ஆதிவிநாயகர்' என்றும்
அழைக்கிறார்கள். தனிச்சன்னதியில் இருக்கும் இந்த விநாயகர், இரு கால்களையும்
மடக்கி அமர்ந்திருக்கிறார். சதுர்த்தி திதியில் விசேஷ பூஜை நடக்கிறது.
விநாயகருக்கு சிவன் ஒரு மார்கழி மாத சதயம் நட்சத்திரத்துடன் கூடிய, சஷ்டி
திதியன்று தோஷ நிவர்த்தி செய்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் மார்கழி சதய
நட்சத்திரத்தன்று சுவாமிக்கு விசேஷ பூஜை, வழிபாடு மற்றும் விநாயகர்
புறப்பாடு நடக்கிறது.
சிலையாய் அமைந்த சிவன்: ஒருசமயம்
சிறுத்தொண்டருக்கு காட்சி தந்த சிவனுக்கு, இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர்
சிலை வடித்தார். ஆனால், பலமுறை சிலை சரியாக அமையவில்லை. அப்போது அங்கு வந்த
சிவனடியார் ஒருவர் தாகத்திற்கு நீர் கேட்டார். சிற்பிகள் சிலை அமையாத
கோபத்தில், சிலை செய்ய வைத்திருந்த உலோக கலவையை கொடுத்துவிட்டனர். அதை
அருந்திய அடியார், அப்படியே சிலையாக மாறினார். சிவனே, சிலையாக அமைந்ததை
உணர்ந்த மன்னர் இங்கு பிரதிஷ்டை செய்தார். அப்போது அச்சிலையில் நெற்றியில்
சிறிய புடைப்பு இருந்தது. அதனை சிற்பிகள் தட்டவே காயம் ஏற்பட்டு, ரத்தம்
வழிந்தது. பின்பு பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ வைக்கவே ரத்தம் நின்றது.
தற்போதும் நெற்றியில் காயத்துடனே உத்திராபசுபதீஸ்வரர் காட்சி தருகிறார்.
சாயரட்சை பூஜையில் இவருக்கு பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ சாத்தப்படுகிறது.
சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதப்பிறப்பு, சித்திரை பரணி, வைகாசி
திருவோணம், ஐப்பசி பரணி ஆகிய விசேஷ நாட்களில் இவருக்கு அபிஷேகம்
செய்யப்படுகிறது.
விநாயகரால் சம்ஹாரம் செய்யப்பட்ட கஜமுகாசுரனின்
செங்குருதி (சிவப்பு இரத்தம்) இப்பகுதியில் ஆறாக ஓடியதாம். எனவே இத்தலம்
"திருச்செங்காட்டங்குடி' என்று அழைக்கப்படுகிறது. "ரத்தாரண்யக்ஷேத்ரம்'
என்பது இத்தலத்தின் மற்றொரு பெயர். |
|
|
|
|
|
 |
தல வரலாறு: |  |
|
|
|
|
யானை முகம் கொண்ட கஜமுகாசுரன் என்னும்
அசுரனை, விநாயகர் சம்ஹாரம் செய்தார். இதனால் அவருக்கு தோஷம் உண்டானது.
தோஷம் நீங்க இத்தலம் வந்தார். சுயம்புவாக எழுந்தருளியிருந்த சிவனை
வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து தோஷம் நீக்கியருளினார். எனவே
சிவன், "கணபதீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். |
|
|
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இத்தல இறைவன் சுயம்பு முர்த்தியாக அருள்பாலிக்கிறார். தற்போதும் நெற்றியில் காயத்துடனே உத்திராபசுபதீஸ்வரர் காட்சி தருகிறார்.
|
20.அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
கேடிலியப்பர், அட்சயலிங்க சுவாமி |
|
உற்சவர் | : |
- |
|
அம்மன்/தாயார் | : |
வனமூலையம்மன், சுந்தரகுஜாம்பிகை |
|
தல விருட்சம் | : |
பத்ரி, இலந்தை |
|
தீர்த்தம் | : |
சரவணப்பொய்கை, அக்னி, சேஷ, பிரம்ம, சூரிய, சந்திர, குபேர தீர்த்தம் |
|
ஆகமம்/பூஜை | : |
- |
|
பழமை | : |
1000-2000 வருடங்களுக்கு முன் |
|
புராண பெயர் | : |
கீவளூர், திருக்கீழ்வேளூர் |
|
ஊர் | : |
கீழ்வேளூர் |
|
மாவட்டம் | : |
திருவாரூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
 | பாடியவர்கள்: |  |
|
|
|
|
அப்பர், சம்பந்தர்
தேவாரப்பதிகம்
மின்னு லாவிய சடையினர் விடையினர் மிளிர்தரும் அரவோடும் பன்னு லாவிய
மறையொளி நாவினர் கறையணி கண்டத்தர் பொன்னு லாவிய கொன்றையந் தாரினர்
புகழ்மிகு கீழ்வேளூர் சீரு லாவிய சிந்தையர் மேல்வினை யோடிட வீடாமே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 84வது தலம். |
|
|
|
|
 |
திருவிழா: |
 |
|
|
|
|
சித்ராபவுர்ணமியில் பிரமோற்சவம் நடைபெறுகிறது. |
|
|
|
|
 |
தல சிறப்பு: |
 |
|
|
|
|
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். |
|
|
|
|
 |
திறக்கும் நேரம்: |  |
|
| | |
| காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். | |
| | |
 |
முகவரி: |  |
| | |
|
அருள்மிகு கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) திருக்கோயில், கீழ்வேளூர் - 611 104.
திருவாரூர் மாவட்டம். |
|
| | |
 |
போன்: |  |
| | |
|
+91- 4366 - 276 733. | |
| | |
 |
பொது தகவல்: |  |
|
|
|
|
ஏழு நிலை
ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கிய சன்னதி. இரண்டு பிரகாரங்கள்.
உள்பிரகாரத்தில் முருகன், பத்ரகாளி, நடராஜர், சோமாஸ்கந்தர்,
தெட்சிணாமூர்த்தி, அகத்தியர், விஸ்வநாதர், கைலாசநாதர், பிரகதீஸ்வரரர்,
அண்ணாமலையார், ஜம்புகேஸ்வரர் ஆகிய சன்னதிகள் உள்ளன. குபேரனுக்கும்,
முருகப்பெருமானுக்கும் தனித்தனியாக மிகப்பெரிய சன்னதிகள் அமைந்துள்ளன.
இத்தல விநாயகர் பத்ரி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். |
|
|
|
|
|
|
 |
பிரார்த்தனை |  |
|
| |
|
பாவங்கள்,தோஷங்கள் நீங்க பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். | |
|
| |
 |
நேர்த்திக்கடன்: |  |
|
| |
|
பிரார்த்தனை நிறைவேறியதும் கோயில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடை அளித்து வழிபாடு செய்கின்றனர். | |
|
| |
 |
தலபெருமை: |  |
|
|
|
|
வேளூர்
என்ற பெயருடைய தலங்கள் பல இருந்ததால் கிழக்கே உள்ள இத்தலம் "கீழ்வேளூர்'
ஆனது. கோச்செங்கண்ணன் கட்டிய மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்று. இங்குள்ள
அஞ்சுவட்டத்தம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அகத்தியர் பூஜித்த
லிங்கமும் உள்ளது. இங்குள்ள நடராஜர் இடது பாதம் ஊன்றி வலது பாதம் தூக்கிய
நிலையில் பத்து திருக்கரங்களுடன் அகத்தியருக்கு அருள்பாலிப்பது
சிறப்பம்சமாகும்.
நோய் தீரும் பிரார்த்தனை: படைப்பாற்றல் குறைந்ததால், கோயில்
வடக்கு கோபுர வாசலின் எதிரில் பிரம்மதீர்த்தம் ஏற்படுத்தி, அதில் மூழ்கி
அட்சயலிங்க சுவாமியை வழிபட்டார் பிரம்மா. அவருக்கு மீண்டும் படைக்கும்
ஆற்றல் கிடைத்தது. இங்குள்ள திருமஞ்சனக்குளம் தோஷ நிவர்த்தியை அளிக்கிறது.
நிருதி மூலையிலுள்ள இந்திர தீர்த்தத் தடாகத்தில் இந்திரன் மூழ்கி தன் சாபம்
நீங்கப் பெற்றான். தென்மேற்கு மூலையிலுள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடினால்
தோல் நோய் குணமடைவதாக நம்பிக்கையுள்ளது.
சிற்ப வேலைப்பாடு: அம்பிகை பிம்பம் சுதையால் ஆனதால் அபிஷேகம்
கிடையாது. சாம்பிராணித்தைலம் மட்டும் சாத்தப்படுகிறது. முருகன்
வடக்குப்பார்த்து பாலரூபமாய் புன்சிரிப்புடன் நின்று தவம் புரிகிறார்.
தேவநாயகர் என்று அழைக்கப்படும் தியாகராஜர் திருவுருவம் சிறப்பானதாகும்.
கோயிலிலுள்ள சிங்க உருவங்களும், யாளி வரிசைகளும், வளைந்து தொங்கும்
சட்டங்களும், அவற்றின் நுனியில் வாழைப்பூத் தொங்கல்களும், அதைத் தம்
மூக்கால் கொத்தும் கிளிகளும் சிற்ப வேலைப்பாடுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன.
விசேஷ அம்பாள்: மூலவர் அட்சயலிங்க சுவாமி என்ற கேடிலியப்பர்
என்றும், அம்பாள் சுந்தரகுஜாம்பாள் என்றும், வனமுலை நாயகி என்றும்
அழைக்கப்படுகின்றனர். பத்ரகாளியின் அம்சமான "அஞ்சுவட்டத்தம்மன்' என்ற
தெய்வமும் இங்கு குடியிருக்கிறாள். நான்கு திசைகள் மற்றும் ஆகாயம் ஆக ஐந்து
புறங்களிலும் இருந்து பிரச்னை ஏற்பட்டாலும், பாதுகாப்பு தருபவளாக
விளங்குவதால் இந்தப்பெயர் சூட்டப்பட்டது. இவள் ஒரு சமயம் ஐந்துமுறை
ஆகாயத்தில் வட்டமடித்து நடனமாடியதாகவும், அதனால் இந்தப் பெயர்
ஏற்பட்டதாகவும் ஒரு கருத்து இருக்கிறது. எப்படியாயினும், இவள் ஆகாய தெய்வம்
என்பதால், அடிக்கடி விமானபயணம் மேற்கொள்வார், இந்த அம்பாளை வணங்கி
விபத்தின்றி பயணம் செய்ய வேண்டிக் கொள்ளலாம். பாலசுப்பிரமணியர், அகஸ்தியர்,
ஆளுங்கோவேஸ்வரர், விஸ்வநாதர், மகாலட்சுமி, கைலாசநாதர், பிரகதீஸ்வரர்,
அண்ணாமலைநாதர், ஜம்புகேஸ்வரர், குபேரன், தேவேந்திரன் சன்னதிகளும் இங்கு
உள்ளன. மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி உற்சவரான கல்யாணசுந்தரரும், நர்த்தன
கணேசரும் அருள்பாலிக்கின்றனர். |
|
|
|
|
|
 |
தல வரலாறு: |  |
|
|
|
|
திருச்செந்தூரில் முருகப்பெருமான்
சூரனை கொன்ற கொலைப்பாவம் நீங்க சிவனை வேண்டினார். கீழ்வேளூர்
திருத்தலத்தில் குளம் உண்டாக்கி சிவனை வழிபட்டால் பாவம் விலகும் என சிவன்
அருளினார். அதன்படி முருகப்பெருமானும் நவவீரர்களுடன் இத்தலம் வந்தார்.
முதலில் முழுமுதற்கடவுளான விநாயகரை மஞ்சளால் பிடித்து வழிபட்டார். அதுவே
இப்போது கீழ்வேளூர் அருகே "மஞ்சாடி' எனப்படுகிறது. அடுத்து சிவலிங்க பூஜை
செய்வதற்காக, தேவதச்சன் மயனை கொண்டு அருமையான சிவாலயத்தை கட்டி, புஷ்கலம்
எனப்படும் விமானத்தையும் அமைத்தார்.
கோயிலின் கிழக்கு கோபுர வாசலில் தனது வேலால் தீர்த்தத்தை உண்டாக்கி
அதில் தானும், தன்னுடன் வந்த நவவீரர்களையும், சேனாதிபதிகளையும்,
பூதப்படையினரையும் சேர்ந்து நீராடினார். இதனால் இத்தலம் "வேளூர்' ஆனது.
பின் முருகன் சிவனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார். இந்த தவம்
முழுமையடையாமல் இருக்க தீய சக்திகள் இடையூறு விளைவித்தன. இதிலிருந்து தன்னை
காக்க பார்வதியை அழைத்தார் முருகன். முருகன் அழைத்தவுடனேயே தாய் பார்வதி,
"அஞ்சுவட்டத்தம்மன்' என்ற திருநாமம் கொண்டு நான்கு திசை மற்றும்
ஆகாயத்திலுமாக சேர்த்து காவல் புரிந்தார்.
சிங்கத்துவஜன் என்னும் அரசன் காட்டில் வேட்டையாடி அலைந்த போது களைப்பால்
தாகம் ஏற்பட்டது. ஒரு முனிவரின் ஆஸ்ரமத்துக்கு சென்று, அரசன் என்ற
ஆணவத்துடன் தண்ணீர் கொண்டு வரும்படி ஆரவாரமாகக் கத்தினான். இதனால்,
தியானத்தில் இருந்த முனிவர் கோபத்துடன் வெளியில் வந்து, "கழுதை போல்
கத்துகிறாயே, நீ கழுதையாகப் போ,'' என்று சபித்தார். மற்றொரு காட்டரசன்
விந்திய மலையில் தவம் செய்து கொண்டிருந்த அகஸ்தியரைத் தரிசிக்க சென்றவர்களை
துன்புறுத்தி வந்தான். இதனால் அந்த அரசனையும் கழுதையாகுமாறு அகஸ்தியர்
சபித்தார்.அவர்கள் கழுதையாகப் பிறந்தனர். வணிகன் ஒருவன் அவற்றை பொருள்
சுமக்க பயன்படுத்தினான். ஒருநாள், கழுதைகள், தற்போதைய அட்சயலிங்க சுவாமி
கோயிலிலுள்ள பிரம்மத் தீர்த்தத்தில் நீர் பருகின. இறைவனின் அருளால் அவை
தமது முற்பிறப்பு வரலாற்றை உணர்ந்தன. அதை மனித மொழியில் பேசிக்கொண்டன.
கழுதைகள் பேசுவதைக் கவனித்த வணிகன், அவற்றை விட்டுவிட்டு ஓடிவிட்டான்.
இரண்டு கழுதைகளும் கோயிலை வலம் வந்தன. அட்சயலிங்க சுவாமியின் அருள் பெற்றன.
ஆடிமாதம் பவுர்ணமி முதல் சதுர்த்தி வரையில் பிரம்மதீர்த்தத்தின்
நீரருந்தினால், நீங்கள் மீண்டும் மனித வடிவை அடைவீர்கள் என்று அசரீரி
ஒலிக்கவே, இரண்டும் நீர் அருந்தி மனித வடிவத்தைப் பெற்றன. சிரஞ்சீவியாக
விளங்கும் மார்கண்டேய முனிவர் ஒரு நாள் தம் நித்திய சிவ பூஜையை
துவங்கினார். அப்போது பிரம்மகற்பம் முடிந்து, கடல் பொங்கி அண்டபகிரண்டங்கள்
அழியத் துவங்கியது. "எந்தக்காலத்திலும் அழியாத தென்னிலந்தை வனம் சென்று
கீழ்வேளூர் கேடிலியை வணங்குவாய்''என்று அசரீரி ஒலித்தது. அதன்படி
மார்கண்டேய முனிவர் வணங்கி பேரு பெற்ற இடம் அட்சயலிங்க சுவாமி கோயில். இது
உலகம் அழியும் காலத்திலும் அழியாத தலமாக விளங்குமென குறிப்பு உள்ளது. |
|
|
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
|
21.அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
தேவபுரீஸ்வரர் (தேவகுருநாதர், கதலிவனேஸ்வரர், ஆதிதீட்சிரமுடையார்) |
|
உற்சவர் | : |
- |
|
அம்மன்/தாயார் | : |
மதுரபாஷினி, தேன் மொழியாள் |
|
தல விருட்சம் | : |
கல்வாழை |
|
தீர்த்தம் | : |
தேவதீர்த்தம் |
|
ஆகமம்/பூஜை | : |
- |
|
பழமை | : |
1000-2000 வருடங்களுக்கு முன் |
|
புராண பெயர் | : |
தேவனூர், திருத்தேவூர் |
|
ஊர் | : |
தேவூர் |
|
மாவட்டம் | : |
திருவாரூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
 | பாடியவர்கள்: |  |
|
|
|
|
சம்பந்தர், அப்பர்
தேவாரப்பதிகம்
மறைகளான் மிகவழிபடு மாணியைக் கொல்வான் கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்த
வெங்கடவுள் செறுவில் வாளைகள் சேலவை பொருவயல் தேவூர் அறவன் சேவடி யடைந்தனம்
அல்லலொன்று இலமே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 85வது தலம். |
|
|
|
|
 |
திருவிழா: |
 |
|
|
|
|
வைகாசி பெருவிழா, மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை. |
|
|
|
|
 |
தல சிறப்பு: |
 |
|
|
|
|
இத்தல இறைவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தின் தல விருட்சம் கல்லில் வளரும் அதிசய கல்வாழை மரமாகும். |
|
|
|
|
 |
திறக்கும் நேரம்: |  |
|
| | |
| காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | |
| | |
 |
முகவரி: |  |
| | |
|
அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில்,
தேவூர்-611 109, திருவாரூர் மாவட்டம். |
|
| | |
 |
போன்: |  |
| | |
|
+91- 4366 - 276 113, +91-94862 78810 | |
| | |
 |
பொது தகவல்: |  |
|
|
|
|
வழிபட்டோர்:
மாணிக்க வாசகர், சேக்கிழார், அருணகிரிநாதர், வள்ளலார் கோச்செங்கட்சோழ
மன்னனால் கட்டப்பட்ட 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. இத்தல விநாயகரை
பிரும்ம வரதர் என்றும் அழைக்கிறார்கள். அஷ்ட விநாயகர் தலங்களில் இதுவும்
ஒன்று. மூன்று நிலை ராஜ கோபுரம், 5 பிரகாரங்கள் உள்ளன. சுவாமி சன்னதிக்கும்
அம்மன் சன்னதிக்கும் நடுவே சுப்பிரமணியர் சன்னதி அமைந்திருப்பதால் இத்தலம்
"சோமாஸ்கந்த மூர்த்தி' தலமாகும்.
பிரகாரத்தில் பாலகணபதி,
பாலமுருகன், இந்திரலிங்கம், கவுதமலிங்கம், அகல்யா லிங்கம், மாணிக்கவாசகர்
வழிபட்ட ஆத்மலிங்கம், நடராஜர் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். |
|
|
|
|
|
|
 |
பிரார்த்தனை |  |
|
| |
|
சிறந்த
குரு ஸ்தலமான இங்கு வழிபாடு செய்வதால் குரு சம்மந்தப்பட்ட தோஷங்கள்
விலகும் என்பது ஐதீகம். செல்வம் பெருகவும், இழந்த செல்வங்கள் மீண்டும்
பெறவும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் தேவபுரீஸ்வரரை வழிபாடு
செய்வது சிறப்பு. | |
|
| |
 |
நேர்த்திக்கடன்: |  |
|
| |
|
திருமணபாக்கியம், புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் திங்கள் கிழமைகளில் இங்குள்ள இந்த வாழைக்கு பூஜை செய்கிறார்கள். | |
|
| |
 |
தலபெருமை: |  |
|
|
|
|
தேவகுரு:
வியாழ பகவான் (குரு) இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றதால் இங்குள்ள
தெட்சிணாமூர்த்தி பாதத்தில் முயலகன் இல்லை. வியாழபகவானுக்கு குரு பட்டத்தை
வழங்கியதால், இங்குள்ள தெட்சிணாமூர்த்தி "தேவகுரு' என அழைக்கப்படுகிறார்.
சிவ விஷ்ணு துர்க்கை:
பொதுவாக கோயில்களில் சிவதுர்க்கை, அல்லது விஷ்ணு துர்க்கை இருப்பாள்.
ஆனால் இத்தலத்தில் உள்ள துர்க்கை ஒரு கையில் சங்கும், மறுகையில் மான்,
மழுவும் வைத்து சிவ-விஷ்ணு துர்க்கையாக அருள்பாலிக்கிறாள்.
விருத்திராசுரனை
கொன்ற பழி தீர, இந்திரன் முதலான தேவர்கள் வழிபட்டு அருள்பெற்றதால், இறைவன்
தேவபுரீஸ்வரர் ஆனார். தலம் தேவூர் ஆனது. தேவர்கள் வழிபட்ட தலமாதலால்,
இங்குள்ள அனைத்து தெய்வங்களும் "தேவ' என்ற அடைமொழியுடன்
வணங்கப்படுகிறார்கள். இத்தலத்தின் தல விருட்சம் கல்லில் வளரும் அதிசய
கல்வாழை மரமாகும். தேவர்கள் இறைவனை வழிபட்ட போது, தேவலோகத்தில் இருந்து
வந்த இந்த வாழையும் இறைவனை வழிபட்டு தலவிருட்சமாக மூலவர் அருகிலேயே
அமைந்தது என்பர். திருமணபாக்கியம், புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள்
திங்கள் கிழமைகளில் இந்த வாழைக்கு பூஜை செய்கிறார்கள்.
பாண்டவர்களுக்கு
துணை புரிந்த விராடன் தன் மகன் உத்திரனோடு இங்கு தங்கி இறைவனை வழிபாடு
செய்துள்ளான். உலகில் 12 ஆண்டுகள் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் கவுதம முனிவர்
இத்தலத்தில் தங்கி, லிங்கம் அமைத்து வழிபாடு செய்து, பொன்னும் பொருளும்
பெற்று மக்களின் பசிப்பிணி போக்கியதாக வரலாறு கூறுகிறது.
மகத நாட்டு மன்னன் குலவர்த்தனன் பரிவேள்வியில் வெற்றிபெற, இங்குள்ள இறைவனை வழிபட்டு வேள்வியை நிறைவேற்றினான். |
|
|
|
|
|
 |
தல வரலாறு: |  |
|
|
|
|
ராவணன் குபேரனிடம் போரிட்டு அவனது
செல்வ கலசங்களை எடுத்து சென்றான். வருத்தமடைந்த குபேரன் தனது செல்வங்கள்
மீண்டும் கிடைக்க பல தலங்களுக்கு சென்று வழிபட்டான். அப்படி வழிபாடு செய்து
வரும் போது இத்தலத்தில் உள்ள சிவனுக்கு வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில்
செந்தாமரைப் பூக்களால் அர்ச்சித்து வழிபாடு செய்தான். பூஜைக்கு மகிழ்ந்த
ஈசன், குபேரனுக்கே அந்த செல்வ கலசங்கள் கிடைக்க செய்ததாக தல புராணம்
கூறுகிறது. |
|
|
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தலத்தின் விருச்சம் கல்லில வளரும் கல்வாழை மரமாகும்
இத்தல இறைவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் தல விருட்சம் கல்லில் வளரும் அதிசய கல்வாழை மரமாகும்.
|
|
|
|
இத்தல இறைவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் தல விருட்சம் கல்லில் வளரும் அதிசய கல்வாழை மரமாகும்.
|
|
|
|
இத்தல இறைவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் தல விருட்சம் கல்லில் வளரும் அதிசய கல்வாழை மரமாகும்.
|
|
|
|
|
| இத்தல இறைவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் தல விருட்சம் கல்லில் வளரும் அதிசய கல்வாழை மரமாகும்.
|
|
|
|
இத்
இத்தல இறைவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் தல விருட்சம் கல்லில் வளரும் அதிசய கல்வாழை மரமாகும்.
|
|
|
|
தல இறைவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் தல விருட்சம் கல்லில் வளரும் அதிசய கல்வாழை மரமாகும்.
English
|
அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
திருநேத்திரநாதர் ( முக்கோணநாதர்) |
|
உற்சவர் | : |
- |
|
அம்மன்/தாயார் | : |
அஞ்சாட்சி ( மயிமேவும் கண்ணி) |
|
தல விருட்சம் | : |
வில்வம் |
|
தீர்த்தம் | : |
சோடஷ (முக்கூடல்) தீர்த்தம் |
|
ஆகமம்/பூஜை | : |
- |
|
பழமை | : |
1000-2000 வருடங்களுக்கு முன் |
|
புராண பெயர் | : |
கேக்கரை, திருப்பள்ளி முக்கோடல், திருப்பள்ளி முக்கூடல் |
|
ஊர் | : |
திருப்பள்ளி முக்கூடல் |
|
மாவட்டம் | : |
திருவாரூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
 | பாடியவர்கள்: |  |
|
|
|
|
திருநாவுக்கரசர்
தேவாரப்பதிகம்
அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா
வண்ணம் கடிந்தானைக் கார்முகில் போல் கண்டத்தானைக் கடுஞ்சினத்தோன் தன்னுடலை
நேமியாலே தடிந்தானைத் தன்னொப்பார் இல்லாதானைத் தத்துவனை உத்தமனை நினைவார்
நெஞ்சில் படிந்தானைப் பள்ளியின் முக்கூடலானைப் பயிலாதே பாழேநான் உழன்ற
வாறே.
-திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 86வது தலம். |
|
|
|
|
 |
திருவிழா: |
 |
|
|
|
|
தை, ஆடி, மகாளய அமாவாசை சிறப்பு. சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடத்தப்படுகிறது. |
|
|
|
|
 |
தல சிறப்பு: |
 |
|
|
|
|
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
மாசி சிவராத்திரி தினத்தில் சூரியக்கதிர்கள் சிவனின் திருமேனியில் விழுகிறது. |
|
|
|
|
 |
திறக்கும் நேரம்: |  |
|
| | |
| காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். | |
| | |
 |
முகவரி: |  |
| | |
|
அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில்,
திருப்பள்ளி முக்கூடல்,
கேக்கரை -610 002.
திருவாரூர் மாவட்டம். |
|
| | |
 |
போன்: |  |
| | |
|
+91- 4366 - 244 714, +91- 4366 -98658 44677 | |
| | |
 |
பொது தகவல்: |  |
|
|
|
|
கோயிலின் முகப்பில் மேற்புறத்தில் இறைவன், இராமர், ஜடாயு, கன்னி விநாயகர், சுப்பிரமணியர் சுதை உருவங்கள் உள்ளன. |
|
|
|
|
|
|
 |
பிரார்த்தனை |  |
|
| |
|
12 அமாவாசை இத்தல குளத்தில் குளித்து இறைவனை வழிபாடு செய்தால் புத்திர தோஷம், திருமணத்தடை விலகும் என்பது நம்பிக்கை | |
|
| |
 |
நேர்த்திக்கடன்: |  |
|
| |
|
சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
கோயில்களில் நிரந்தரமாக தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கி கொடுக்கின்றனர். | |
|
| |
 |
தலபெருமை: |  |
|
|
|
|
இத்தலத்து
அம்மன் மயிமேவும்கண்ணி எனப்படுகிறார். தபோவதனி என்னும் அரசி குழந்தை
பாக்கியம் வேண்டி இத்தலத்து அம்மனை வழிபாடு செய்தாள். இவளது வேண்டுதலை ஏற்ற
அம்மன் தாமரை மலரில் அழகிய குழந்தையாக தோன்றினாள். அப்பெண் மணப்பருவம்
வந்தபோது இறைவன் வேதியராக வந்து அவளை மணம் புரிந்தார் என கூறுப்படுகிறது.
இங்குள்ள
குளத்தின் உள்ளே 16 கிணறுகள் உள்ளன. இதில் நீராடினால் மகாமக தீர்த்த்தில்
நீராடிய பலன் கிடைக்கும். 12 அமாவாசை இக்குளத்தில் குளித்து இறைவனை வழிபாடு
செய்தால் புத்திர தோஷம், திருமணத்தடை விலகும் என்பது நம்பிக்கை.
ராமர் தசரத சக்கரவர்த்திக்கு தர்ப்பணம் செய்த தலங்களில் இதுவும் ஒன்று.
முன்னோர்களுக்கு இங்கு தர்ப்பணம் செய்தால் கயா கரையில் செய்த பலன்
கிடைக்கும் என்பதால் இத்தலம் "கேக்கரை' என்றும் அழைக்கப்படுகிறது. |
|
|
|
|
|
 |
தல வரலாறு: |  |
|
|
|
|
ஒரு முறை காசி மற்றும் ராமேஸ்வரம்
தீர்த்தத்தில் ஒரே சமயத்தில் நீராடி, இரண்டு தலங்களையும் ஒன்றாக தரிசித்து
முக்தி அடைவதற்காக ஜடாயு இத்தலத்தில் தவம் செய்தது.
இதன் தவத்தில்
மகிழ்ந்த சிவபெருமான் ஜடாயுவுக்கு தரிசனம் தந்து,""ராவணன் சீதையை தூக்கி
செல்லும் போது நீ அதை தடுப்பாய். இதனால் சினம் கொண்ட ராவணன் உனது இறக்கையை
வெட்டி விடுவான்.
நீ வேதனையால் துடித்துகொண்டிருக்கும் போது ராமபிரான் வருவார்.
நீ
அவரிடம் ராவணன் சீதையை இந்த வழியாக தூக்கி சென்றான் என்ற விஷயத்தை
தெரிவிப்பாய். அதைக்கேட்ட ராமர் மகிழ்ச்சியடைவார். நீ அவரது பாதத்தில்
விழுந்து முக்தி பெறுவாய்,''என கூறினார். அதற்கு ஜடாயு,""இறைவா! நான் காசி
ராமேஸ்வரம் தரிசனம் கேட்டேன். ஆனால் எனது சிறகை ராவணன் வெட்டி விடுவான்
என்று கூறுகிறீர்கள்.
நான் எப்படி இப்புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது,''என கேட்டது. அதற்கு
சிவன்,""நீ ஒரு சேது சமுத்திரத்தில் நீராட ஆசைப்பட்டாய். ஆனால் இத்தலத்தில்
உள்ள குளத்தில் நீராடினால், 16 (சோடஷ) சேது சமுத்திர தீர்த்தத்தில்
நீராடிய பலன் உனக்கு கிடைக்கும்,''என கூறினார். கோயில் எதிரில் உள்ள
இக்குளம் பிருங்கி மகரிஷி காலத்தில் பிள்ளையாரால் வெட்டப்பட்டது என்பர்.
இத்தீர்த்தம்
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்திற்கு
இணையானதால் முக்கூடல் தீர்த்தம் என வழங்கப்படுகிறது.ஒரு முறை சோழமன்னன்
ஒருவன் வேட்டையாட குதிரை மீதேறி செல்லும் போது இவ்வூர் வழியாக சென்றான்.
இரவு நேரமாகி விட்டதால் இங்கு தங்க நேர்ந்தது. மன்னன் உணவருந்தும் போது
சிவதரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டான். இதையறிந்த குதிரைக்காரன்
குதிரைக்கு வைத்திருந்த கொள்ளுப்பையை சிவலிங்கமாக அலங்கரித்து, அதைக்காட்டி
மன்னனை உணவருந்த செய்தான்.
பின் அப்பையை எடுக்க முயன்றபோது அதுவே சிவலிங்கமாக மாறியது என்றும் இத்தல வரலாறு கூறுகிறது. |
|
|
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மாசி சிவராத்திரி தினத்தில் சூரியக்கதிர்கள் சிவனின் திருமேனியில் விழுகிறது
|
|
|
|
|
அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
திருநேத்திரநாதர் ( முக்கோணநாதர்) |
|
உற்சவர் | : |
- |
|
அம்மன்/தாயார் | : |
அஞ்சாட்சி ( மயிமேவும் கண்ணி) |
|
தல விருட்சம் | : |
வில்வம் |
|
தீர்த்தம் | : |
சோடஷ (முக்கூடல்) தீர்த்தம் |
|
ஆகமம்/பூஜை | : |
- |
|
பழமை | : |
1000-2000 வருடங்களுக்கு முன் |
|
புராண பெயர் | : |
கேக்கரை, திருப்பள்ளி முக்கோடல், திருப்பள்ளி முக்கூடல் |
|
ஊர் | : |
திருப்பள்ளி முக்கூடல் |
|
மாவட்டம் | : |
திருவாரூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
 | பாடியவர்கள்: |  |
|
|
|
|
திருநாவுக்கரசர்
தேவாரப்பதிகம்
அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா
வண்ணம் கடிந்தானைக் கார்முகில் போல் கண்டத்தானைக் கடுஞ்சினத்தோன் தன்னுடலை
நேமியாலே தடிந்தானைத் தன்னொப்பார் இல்லாதானைத் தத்துவனை உத்தமனை நினைவார்
நெஞ்சில் படிந்தானைப் பள்ளியின் முக்கூடலானைப் பயிலாதே பாழேநான் உழன்ற
வாறே.
-திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 86வது தலம். |
|
|
|
|
 |
திருவிழா: |
 |
|
|
|
|
தை, ஆடி, மகாளய அமாவாசை சிறப்பு. சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடத்தப்படுகிறது. |
|
|
|
|
 |
தல சிறப்பு: |
 |
|
|
|
|
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
மாசி சிவராத்திரி தினத்தில் சூரியக்கதிர்கள் சிவனின் திருமேனியில் விழுகிறது. |
|
|
|
|
 |
திறக்கும் நேரம்: |  |
|
| | |
| காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். | |
| | |
 |
முகவரி: |  |
| | |
|
அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில்,
திருப்பள்ளி முக்கூடல்,
கேக்கரை -610 002.
திருவாரூர் மாவட்டம். |
|
| | |
 |
போன்: |  |
| | |
|
+91- 4366 - 244 714, +91- 4366 -98658 44677 | |
| | |
 |
பொது தகவல்: |  |
|
|
|
|
கோயிலின் முகப்பில் மேற்புறத்தில் இறைவன், இராமர், ஜடாயு, கன்னி விநாயகர், சுப்பிரமணியர் சுதை உருவங்கள் உள்ளன. |
|
|
|
|
|
|
 |
பிரார்த்தனை |  |
|
| |
|
12 அமாவாசை இத்தல குளத்தில் குளித்து இறைவனை வழிபாடு செய்தால் புத்திர தோஷம், திருமணத்தடை விலகும் என்பது நம்பிக்கை | |
|
| |
 |
நேர்த்திக்கடன்: |  |
|
| |
|
சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
கோயில்களில் நிரந்தரமாக தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கி கொடுக்கின்றனர். | |
|
| |
 |
தலபெருமை: |  |
|
|
|
|
இத்தலத்து
அம்மன் மயிமேவும்கண்ணி எனப்படுகிறார். தபோவதனி என்னும் அரசி குழந்தை
பாக்கியம் வேண்டி இத்தலத்து அம்மனை வழிபாடு செய்தாள். இவளது வேண்டுதலை ஏற்ற
அம்மன் தாமரை மலரில் அழகிய குழந்தையாக தோன்றினாள். அப்பெண் மணப்பருவம்
வந்தபோது இறைவன் வேதியராக வந்து அவளை மணம் புரிந்தார் என கூறுப்படுகிறது.
இங்குள்ள
குளத்தின் உள்ளே 16 கிணறுகள் உள்ளன. இதில் நீராடினால் மகாமக தீர்த்த்தில்
நீராடிய பலன் கிடைக்கும். 12 அமாவாசை இக்குளத்தில் குளித்து இறைவனை வழிபாடு
செய்தால் புத்திர தோஷம், திருமணத்தடை விலகும் என்பது நம்பிக்கை.
ராமர் தசரத சக்கரவர்த்திக்கு தர்ப்பணம் செய்த தலங்களில் இதுவும் ஒன்று.
முன்னோர்களுக்கு இங்கு தர்ப்பணம் செய்தால் கயா கரையில் செய்த பலன்
கிடைக்கும் என்பதால் இத்தலம் "கேக்கரை' என்றும் அழைக்கப்படுகிறது. |
|
|
|
|
|
 |
தல வரலாறு: |  |
|
|
|
|
ஒரு முறை காசி மற்றும் ராமேஸ்வரம்
தீர்த்தத்தில் ஒரே சமயத்தில் நீராடி, இரண்டு தலங்களையும் ஒன்றாக தரிசித்து
முக்தி அடைவதற்காக ஜடாயு இத்தலத்தில் தவம் செய்தது.
இதன் தவத்தில்
மகிழ்ந்த சிவபெருமான் ஜடாயுவுக்கு தரிசனம் தந்து,""ராவணன் சீதையை தூக்கி
செல்லும் போது நீ அதை தடுப்பாய். இதனால் சினம் கொண்ட ராவணன் உனது இறக்கையை
வெட்டி விடுவான்.
நீ வேதனையால் துடித்துகொண்டிருக்கும் போது ராமபிரான் வருவார்.
நீ
அவரிடம் ராவணன் சீதையை இந்த வழியாக தூக்கி சென்றான் என்ற விஷயத்தை
தெரிவிப்பாய். அதைக்கேட்ட ராமர் மகிழ்ச்சியடைவார். நீ அவரது பாதத்தில்
விழுந்து முக்தி பெறுவாய்,''என கூறினார். அதற்கு ஜடாயு,""இறைவா! நான் காசி
ராமேஸ்வரம் தரிசனம் கேட்டேன். ஆனால் எனது சிறகை ராவணன் வெட்டி விடுவான்
என்று கூறுகிறீர்கள்.
நான் எப்படி இப்புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது,''என கேட்டது. அதற்கு
சிவன்,""நீ ஒரு சேது சமுத்திரத்தில் நீராட ஆசைப்பட்டாய். ஆனால் இத்தலத்தில்
உள்ள குளத்தில் நீராடினால், 16 (சோடஷ) சேது சமுத்திர தீர்த்தத்தில்
நீராடிய பலன் உனக்கு கிடைக்கும்,''என கூறினார். கோயில் எதிரில் உள்ள
இக்குளம் பிருங்கி மகரிஷி காலத்தில் பிள்ளையாரால் வெட்டப்பட்டது என்பர்.
இத்தீர்த்தம்
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்திற்கு
இணையானதால் முக்கூடல் தீர்த்தம் என வழங்கப்படுகிறது.ஒரு முறை சோழமன்னன்
ஒருவன் வேட்டையாட குதிரை மீதேறி செல்லும் போது இவ்வூர் வழியாக சென்றான்.
இரவு நேரமாகி விட்டதால் இங்கு தங்க நேர்ந்தது. மன்னன் உணவருந்தும் போது
சிவதரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டான். இதையறிந்த குதிரைக்காரன்
குதிரைக்கு வைத்திருந்த கொள்ளுப்பையை சிவலிங்கமாக அலங்கரித்து, அதைக்காட்டி
மன்னனை உணவருந்த செய்தான்.
பின் அப்பையை எடுக்க முயன்றபோது அதுவே சிவலிங்கமாக மாறியது என்றும் இத்தல வரலாறு கூறுகிறது. |
|
|
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மாசி சிவராத்திரி தினத்தில் சூரியக்கதிர்கள் சிவனின் திருமேனியில் விழுகிறது
|
|
|
|
அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
திருநேத்திரநாதர் ( முக்கோணநாதர்) |
|
உற்சவர் | : |
- |
|
அம்மன்/தாயார் | : |
அஞ்சாட்சி ( மயிமேவும் கண்ணி) |
|
தல விருட்சம் | : |
வில்வம் |
|
தீர்த்தம் | : |
சோடஷ (முக்கூடல்) தீர்த்தம் |
|
ஆகமம்/பூஜை | : |
- |
|
பழமை | : |
1000-2000 வருடங்களுக்கு முன் |
|
புராண பெயர் | : |
கேக்கரை, திருப்பள்ளி முக்கோடல், திருப்பள்ளி முக்கூடல் |
|
ஊர் | : |
திருப்பள்ளி முக்கூடல் |
|
மாவட்டம் | : |
திருவாரூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
 | பாடியவர்கள்: |  |
|
|
|
|
திருநாவுக்கரசர்
தேவாரப்பதிகம்
அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா
வண்ணம் கடிந்தானைக் கார்முகில் போல் கண்டத்தானைக் கடுஞ்சினத்தோன் தன்னுடலை
நேமியாலே தடிந்தானைத் தன்னொப்பார் இல்லாதானைத் தத்துவனை உத்தமனை நினைவார்
நெஞ்சில் படிந்தானைப் பள்ளியின் முக்கூடலானைப் பயிலாதே பாழேநான் உழன்ற
வாறே.
-திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 86வது தலம். |
|
|
|
|
 |
திருவிழா: |
 |
|
|
|
|
தை, ஆடி, மகாளய அமாவாசை சிறப்பு. சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடத்தப்படுகிறது. |
|
|
|
|
 |
தல சிறப்பு: |
 |
|
|
|
|
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
மாசி சிவராத்திரி தினத்தில் சூரியக்கதிர்கள் சிவனின் திருமேனியில் விழுகிறது. |
|
|
|
|
 |
திறக்கும் நேரம்: |  |
|
| | |
| காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். | |
| | |
 |
முகவரி: |  |
| | |
|
அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில்,
திருப்பள்ளி முக்கூடல்,
கேக்கரை -610 002.
திருவாரூர் மாவட்டம். |
|
| | |
 |
போன்: |  |
| | |
|
+91- 4366 - 244 714, +91- 4366 -98658 44677 | |
| | |
 |
பொது தகவல்: |  |
|
|
|
|
கோயிலின் முகப்பில் மேற்புறத்தில் இறைவன், இராமர், ஜடாயு, கன்னி விநாயகர், சுப்பிரமணியர் சுதை உருவங்கள் உள்ளன. |
|
|
|
|
|
|
 |
பிரார்த்தனை |  |
|
| |
|
12 அமாவாசை இத்தல குளத்தில் குளித்து இறைவனை வழிபாடு செய்தால் புத்திர தோஷம், திருமணத்தடை விலகும் என்பது நம்பிக்கை | |
|
| |
 |
நேர்த்திக்கடன்: |  |
|
| |
|
சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
கோயில்களில் நிரந்தரமாக தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கி கொடுக்கின்றனர். | |
|
| |
 |
தலபெருமை: |  |
|
|
|
|
இத்தலத்து
அம்மன் மயிமேவும்கண்ணி எனப்படுகிறார். தபோவதனி என்னும் அரசி குழந்தை
பாக்கியம் வேண்டி இத்தலத்து அம்மனை வழிபாடு செய்தாள். இவளது வேண்டுதலை ஏற்ற
அம்மன் தாமரை மலரில் அழகிய குழந்தையாக தோன்றினாள். அப்பெண் மணப்பருவம்
வந்தபோது இறைவன் வேதியராக வந்து அவளை மணம் புரிந்தார் என கூறுப்படுகிறது.
இங்குள்ள
குளத்தின் உள்ளே 16 கிணறுகள் உள்ளன. இதில் நீராடினால் மகாமக தீர்த்த்தில்
நீராடிய பலன் கிடைக்கும். 12 அமாவாசை இக்குளத்தில் குளித்து இறைவனை வழிபாடு
செய்தால் புத்திர தோஷம், திருமணத்தடை விலகும் என்பது நம்பிக்கை.
ராமர் தசரத சக்கரவர்த்திக்கு தர்ப்பணம் செய்த தலங்களில் இதுவும் ஒன்று.
முன்னோர்களுக்கு இங்கு தர்ப்பணம் செய்தால் கயா கரையில் செய்த பலன்
கிடைக்கும் என்பதால் இத்தலம் "கேக்கரை' என்றும் அழைக்கப்படுகிறது. |
|
|
|
|
|
 |
தல வரலாறு: |  |
|
|
|
|
ஒரு முறை காசி மற்றும் ராமேஸ்வரம்
தீர்த்தத்தில் ஒரே சமயத்தில் நீராடி, இரண்டு தலங்களையும் ஒன்றாக தரிசித்து
முக்தி அடைவதற்காக ஜடாயு இத்தலத்தில் தவம் செய்தது.
இதன் தவத்தில்
மகிழ்ந்த சிவபெருமான் ஜடாயுவுக்கு தரிசனம் தந்து,""ராவணன் சீதையை தூக்கி
செல்லும் போது நீ அதை தடுப்பாய். இதனால் சினம் கொண்ட ராவணன் உனது இறக்கையை
வெட்டி விடுவான்.
நீ வேதனையால் துடித்துகொண்டிருக்கும் போது ராமபிரான் வருவார்.
நீ
அவரிடம் ராவணன் சீதையை இந்த வழியாக தூக்கி சென்றான் என்ற விஷயத்தை
தெரிவிப்பாய். அதைக்கேட்ட ராமர் மகிழ்ச்சியடைவார். நீ அவரது பாதத்தில்
விழுந்து முக்தி பெறுவாய்,''என கூறினார். அதற்கு ஜடாயு,""இறைவா! நான் காசி
ராமேஸ்வரம் தரிசனம் கேட்டேன். ஆனால் எனது சிறகை ராவணன் வெட்டி விடுவான்
என்று கூறுகிறீர்கள்.
நான் எப்படி இப்புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது,''என கேட்டது. அதற்கு
சிவன்,""நீ ஒரு சேது சமுத்திரத்தில் நீராட ஆசைப்பட்டாய். ஆனால் இத்தலத்தில்
உள்ள குளத்தில் நீராடினால், 16 (சோடஷ) சேது சமுத்திர தீர்த்தத்தில்
நீராடிய பலன் உனக்கு கிடைக்கும்,''என கூறினார். கோயில் எதிரில் உள்ள
இக்குளம் பிருங்கி மகரிஷி காலத்தில் பிள்ளையாரால் வெட்டப்பட்டது என்பர்.
இத்தீர்த்தம்
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்திற்கு
இணையானதால் முக்கூடல் தீர்த்தம் என வழங்கப்படுகிறது.ஒரு முறை சோழமன்னன்
ஒருவன் வேட்டையாட குதிரை மீதேறி செல்லும் போது இவ்வூர் வழியாக சென்றான்.
இரவு நேரமாகி விட்டதால் இங்கு தங்க நேர்ந்தது. மன்னன் உணவருந்தும் போது
சிவதரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டான். இதையறிந்த குதிரைக்காரன்
குதிரைக்கு வைத்திருந்த கொள்ளுப்பையை சிவலிங்கமாக அலங்கரித்து, அதைக்காட்டி
மன்னனை உணவருந்த செய்தான்.
பின் அப்பையை எடுக்க முயன்றபோது அதுவே சிவலிங்கமாக மாறியது என்றும் இத்தல வரலாறு கூறுகிறது. |
|
|
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மாசி சிவராத்திரி தினத்தில் சூரியக்கதிர்கள் சிவனின் திருமேனியில் விழுகிறது
|
|
|
|
அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
திருநேத்திரநாதர் ( முக்கோணநாதர்) |
|
உற்சவர் | : |
- |
|
அம்மன்/தாயார் | : |
அஞ்சாட்சி ( மயிமேவும் கண்ணி) |
|
தல விருட்சம் | : |
வில்வம் |
|
தீர்த்தம் | : |
சோடஷ (முக்கூடல்) தீர்த்தம் |
|
ஆகமம்/பூஜை | : |
- |
|
பழமை | : |
1000-2000 வருடங்களுக்கு முன் |
|
புராண பெயர் | : |
கேக்கரை, திருப்பள்ளி முக்கோடல், திருப்பள்ளி முக்கூடல் |
|
ஊர் | : |
திருப்பள்ளி முக்கூடல் |
|
மாவட்டம் | : |
திருவாரூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
 | பாடியவர்கள்: |  |
|
|
|
|
திருநாவுக்கரசர்
தேவாரப்பதிகம்
அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா
வண்ணம் கடிந்தானைக் கார்முகில் போல் கண்டத்தானைக் கடுஞ்சினத்தோன் தன்னுடலை
நேமியாலே தடிந்தானைத் தன்னொப்பார் இல்லாதானைத் தத்துவனை உத்தமனை நினைவார்
நெஞ்சில் படிந்தானைப் பள்ளியின் முக்கூடலானைப் பயிலாதே பாழேநான் உழன்ற
வாறே.
-திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 86வது தலம். |
|
|
|
|
 |
திருவிழா: |
 |
|
|
|
|
தை, ஆடி, மகாளய அமாவாசை சிறப்பு. சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடத்தப்படுகிறது. |
|
|
|
|
 |
தல சிறப்பு: |
 |
|
|
|
|
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
மாசி சிவராத்திரி தினத்தில் சூரியக்கதிர்கள் சிவனின் திருமேனியில் விழுகிறது. |
|
|
|
|
 |
திறக்கும் நேரம்: |  |
|
| | |
| காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். | |
| | |
 |
முகவரி: |  |
| | |
|
அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில்,
திருப்பள்ளி முக்கூடல்,
கேக்கரை -610 002.
திருவாரூர் மாவட்டம். |
|
| | |
 |
போன்: |  |
| | |
|
+91- 4366 - 244 714, +91- 4366 -98658 44677 | |
| | |
 |
பொது தகவல்: |  |
|
|
|
|
கோயிலின் முகப்பில் மேற்புறத்தில் இறைவன், இராமர், ஜடாயு, கன்னி விநாயகர், சுப்பிரமணியர் சுதை உருவங்கள் உள்ளன. |
|
|
|
|
|
|
 |
பிரார்த்தனை |  |
|
| |
|
12 அமாவாசை இத்தல குளத்தில் குளித்து இறைவனை வழிபாடு செய்தால் புத்திர தோஷம், திருமணத்தடை விலகும் என்பது நம்பிக்கை | |
|
| |
 |
நேர்த்திக்கடன்: |  |
|
| |
|
சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
கோயில்களில் நிரந்தரமாக தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கி கொடுக்கின்றனர். | |
|
| |
 |
தலபெருமை: |  |
|
|
|
|
இத்தலத்து
அம்மன் மயிமேவும்கண்ணி எனப்படுகிறார். தபோவதனி என்னும் அரசி குழந்தை
பாக்கியம் வேண்டி இத்தலத்து அம்மனை வழிபாடு செய்தாள். இவளது வேண்டுதலை ஏற்ற
அம்மன் தாமரை மலரில் அழகிய குழந்தையாக தோன்றினாள். அப்பெண் மணப்பருவம்
வந்தபோது இறைவன் வேதியராக வந்து அவளை மணம் புரிந்தார் என கூறுப்படுகிறது.
இங்குள்ள
குளத்தின் உள்ளே 16 கிணறுகள் உள்ளன. இதில் நீராடினால் மகாமக தீர்த்த்தில்
நீராடிய பலன் கிடைக்கும். 12 அமாவாசை இக்குளத்தில் குளித்து இறைவனை வழிபாடு
செய்தால் புத்திர தோஷம், திருமணத்தடை விலகும் என்பது நம்பிக்கை.
ராமர் தசரத சக்கரவர்த்திக்கு தர்ப்பணம் செய்த தலங்களில் இதுவும் ஒன்று.
முன்னோர்களுக்கு இங்கு தர்ப்பணம் செய்தால் கயா கரையில் செய்த பலன்
கிடைக்கும் என்பதால் இத்தலம் "கேக்கரை' என்றும் அழைக்கப்படுகிறது. |
|
|
|
|
|
 |
தல வரலாறு: |  |
|
|
|
|
ஒரு முறை காசி மற்றும் ராமேஸ்வரம்
தீர்த்தத்தில் ஒரே சமயத்தில் நீராடி, இரண்டு தலங்களையும் ஒன்றாக தரிசித்து
முக்தி அடைவதற்காக ஜடாயு இத்தலத்தில் தவம் செய்தது.
இதன் தவத்தில்
மகிழ்ந்த சிவபெருமான் ஜடாயுவுக்கு தரிசனம் தந்து,""ராவணன் சீதையை தூக்கி
செல்லும் போது நீ அதை தடுப்பாய். இதனால் சினம் கொண்ட ராவணன் உனது இறக்கையை
வெட்டி விடுவான்.
நீ வேதனையால் துடித்துகொண்டிருக்கும் போது ராமபிரான் வருவார்.
நீ
அவரிடம் ராவணன் சீதையை இந்த வழியாக தூக்கி சென்றான் என்ற விஷயத்தை
தெரிவிப்பாய். அதைக்கேட்ட ராமர் மகிழ்ச்சியடைவார். நீ அவரது பாதத்தில்
விழுந்து முக்தி பெறுவாய்,''என கூறினார். அதற்கு ஜடாயு,""இறைவா! நான் காசி
ராமேஸ்வரம் தரிசனம் கேட்டேன். ஆனால் எனது சிறகை ராவணன் வெட்டி விடுவான்
என்று கூறுகிறீர்கள்.
நான் எப்படி இப்புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது,''என கேட்டது. அதற்கு
சிவன்,""நீ ஒரு சேது சமுத்திரத்தில் நீராட ஆசைப்பட்டாய். ஆனால் இத்தலத்தில்
உள்ள குளத்தில் நீராடினால், 16 (சோடஷ) சேது சமுத்திர தீர்த்தத்தில்
நீராடிய பலன் உனக்கு கிடைக்கும்,''என கூறினார். கோயில் எதிரில் உள்ள
இக்குளம் பிருங்கி மகரிஷி காலத்தில் பிள்ளையாரால் வெட்டப்பட்டது என்பர்.
இத்தீர்த்தம்
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்திற்கு
இணையானதால் முக்கூடல் தீர்த்தம் என வழங்கப்படுகிறது.ஒரு முறை சோழமன்னன்
ஒருவன் வேட்டையாட குதிரை மீதேறி செல்லும் போது இவ்வூர் வழியாக சென்றான்.
இரவு நேரமாகி விட்டதால் இங்கு தங்க நேர்ந்தது. மன்னன் உணவருந்தும் போது
சிவதரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டான். இதையறிந்த குதிரைக்காரன்
குதிரைக்கு வைத்திருந்த கொள்ளுப்பையை சிவலிங்கமாக அலங்கரித்து, அதைக்காட்டி
மன்னனை உணவருந்த செய்தான்.
பின் அப்பையை எடுக்க முயன்றபோது அதுவே சிவலிங்கமாக மாறியது என்றும் இத்தல வரலாறு கூறுகிறது. |
|
|
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மாசி சிவராத்திரி தினத்தில் சூரியக்கதிர்கள் சிவனின் திருமேனியில் விழுகிறது
|
|
|
|
அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
திருநேத்திரநாதர் ( முக்கோணநாதர்) |
|
உற்சவர் | : |
- |
|
அம்மன்/தாயார் | : |
அஞ்சாட்சி ( மயிமேவும் கண்ணி) |
|
தல விருட்சம் | : |
வில்வம் |
|
தீர்த்தம் | : |
சோடஷ (முக்கூடல்) தீர்த்தம் |
|
ஆகமம்/பூஜை | : |
- |
|
பழமை | : |
1000-2000 வருடங்களுக்கு முன் |
|
புராண பெயர் | : |
கேக்கரை, திருப்பள்ளி முக்கோடல், திருப்பள்ளி முக்கூடல் |
|
ஊர் | : |
திருப்பள்ளி முக்கூடல் |
|
மாவட்டம் | : |
திருவாரூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
 | பாடியவர்கள்: |  |
|
|
|
|
திருநாவுக்கரசர்
தேவாரப்பதிகம்
அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா
வண்ணம் கடிந்தானைக் கார்முகில் போல் கண்டத்தானைக் கடுஞ்சினத்தோன் தன்னுடலை
நேமியாலே தடிந்தானைத் தன்னொப்பார் இல்லாதானைத் தத்துவனை உத்தமனை நினைவார்
நெஞ்சில் படிந்தானைப் பள்ளியின் முக்கூடலானைப் பயிலாதே பாழேநான் உழன்ற
வாறே.
-திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 86வது தலம். |
|
|
|
|
 |
திருவிழா: |
 |
|
|
|
|
தை, ஆடி, மகாளய அமாவாசை சிறப்பு. சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடத்தப்படுகிறது. |
|
|
|
|
 |
தல சிறப்பு: |
 |
|
|
|
|
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
மாசி சிவராத்திரி தினத்தில் சூரியக்கதிர்கள் சிவனின் திருமேனியில் விழுகிறது. |
|
|
|
|
 |
திறக்கும் நேரம்: |  |
|
| | |
| காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். | |
| | |
 |
முகவரி: |  |
| | |
|
அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில்,
திருப்பள்ளி முக்கூடல்,
கேக்கரை -610 002.
திருவாரூர் மாவட்டம். |
|
| | |
 |
போன்: |  |
| | |
|
+91- 4366 - 244 714, +91- 4366 -98658 44677 | |
| | |
 |
பொது தகவல்: |  |
|
|
|
|
கோயிலின் முகப்பில் மேற்புறத்தில் இறைவன், இராமர், ஜடாயு, கன்னி விநாயகர், சுப்பிரமணியர் சுதை உருவங்கள் உள்ளன. |
|
|
|
|
|
|
 |
பிரார்த்தனை |  |
|
| |
|
12 அமாவாசை இத்தல குளத்தில் குளித்து இறைவனை வழிபாடு செய்தால் புத்திர தோஷம், திருமணத்தடை விலகும் என்பது நம்பிக்கை | |
|
| |
 |
நேர்த்திக்கடன்: |  |
|
| |
|
சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
கோயில்களில் நிரந்தரமாக தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கி கொடுக்கின்றனர். | |
|
| |
 |
தலபெருமை: |  |
|
|
|
|
இத்தலத்து
அம்மன் மயிமேவும்கண்ணி எனப்படுகிறார். தபோவதனி என்னும் அரசி குழந்தை
பாக்கியம் வேண்டி இத்தலத்து அம்மனை வழிபாடு செய்தாள். இவளது வேண்டுதலை ஏற்ற
அம்மன் தாமரை மலரில் அழகிய குழந்தையாக தோன்றினாள். அப்பெண் மணப்பருவம்
வந்தபோது இறைவன் வேதியராக வந்து அவளை மணம் புரிந்தார் என கூறுப்படுகிறது.
இங்குள்ள
குளத்தின் உள்ளே 16 கிணறுகள் உள்ளன. இதில் நீராடினால் மகாமக தீர்த்த்தில்
நீராடிய பலன் கிடைக்கும். 12 அமாவாசை இக்குளத்தில் குளித்து இறைவனை வழிபாடு
செய்தால் புத்திர தோஷம், திருமணத்தடை விலகும் என்பது நம்பிக்கை.
ராமர் தசரத சக்கரவர்த்திக்கு தர்ப்பணம் செய்த தலங்களில் இதுவும் ஒன்று.
முன்னோர்களுக்கு இங்கு தர்ப்பணம் செய்தால் கயா கரையில் செய்த பலன்
கிடைக்கும் என்பதால் இத்தலம் "கேக்கரை' என்றும் அழைக்கப்படுகிறது. |
|
|
|
|
|
 |
தல வரலாறு: |  |
|
|
|
|
ஒரு முறை காசி மற்றும் ராமேஸ்வரம்
தீர்த்தத்தில் ஒரே சமயத்தில் நீராடி, இரண்டு தலங்களையும் ஒன்றாக தரிசித்து
முக்தி அடைவதற்காக ஜடாயு இத்தலத்தில் தவம் செய்தது.
இதன் தவத்தில்
மகிழ்ந்த சிவபெருமான் ஜடாயுவுக்கு தரிசனம் தந்து,""ராவணன் சீதையை தூக்கி
செல்லும் போது நீ அதை தடுப்பாய். இதனால் சினம் கொண்ட ராவணன் உனது இறக்கையை
வெட்டி விடுவான்.
நீ வேதனையால் துடித்துகொண்டிருக்கும் போது ராமபிரான் வருவார்.
நீ
அவரிடம் ராவணன் சீதையை இந்த வழியாக தூக்கி சென்றான் என்ற விஷயத்தை
தெரிவிப்பாய். அதைக்கேட்ட ராமர் மகிழ்ச்சியடைவார். நீ அவரது பாதத்தில்
விழுந்து முக்தி பெறுவாய்,''என கூறினார். அதற்கு ஜடாயு,""இறைவா! நான் காசி
ராமேஸ்வரம் தரிசனம் கேட்டேன். ஆனால் எனது சிறகை ராவணன் வெட்டி விடுவான்
என்று கூறுகிறீர்கள்.
நான் எப்படி இப்புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது,''என கேட்டது. அதற்கு
சிவன்,""நீ ஒரு சேது சமுத்திரத்தில் நீராட ஆசைப்பட்டாய். ஆனால் இத்தலத்தில்
உள்ள குளத்தில் நீராடினால், 16 (சோடஷ) சேது சமுத்திர தீர்த்தத்தில்
நீராடிய பலன் உனக்கு கிடைக்கும்,''என கூறினார். கோயில் எதிரில் உள்ள
இக்குளம் பிருங்கி மகரிஷி காலத்தில் பிள்ளையாரால் வெட்டப்பட்டது என்பர்.
இத்தீர்த்தம்
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்திற்கு
இணையானதால் முக்கூடல் தீர்த்தம் என வழங்கப்படுகிறது.ஒரு முறை சோழமன்னன்
ஒருவன் வேட்டையாட குதிரை மீதேறி செல்லும் போது இவ்வூர் வழியாக சென்றான்.
இரவு நேரமாகி விட்டதால் இங்கு தங்க நேர்ந்தது. மன்னன் உணவருந்தும் போது
சிவதரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டான். இதையறிந்த குதிரைக்காரன்
குதிரைக்கு வைத்திருந்த கொள்ளுப்பையை சிவலிங்கமாக அலங்கரித்து, அதைக்காட்டி
மன்னனை உணவருந்த செய்தான்.
பின் அப்பையை எடுக்க முயன்றபோது அதுவே சிவலிங்கமாக மாறியது என்றும் இத்தல வரலாறு கூறுகிறது. |
|
|
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மாசி சிவராத்திரி தினத்தில் சூரியக்கதிர்கள் சிவனின் திருமேனியில் விழுகிறது
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| | | | | | | | | |
|
|
|